Thursday, March 12, 2015

பேரம் நல்ல பேரம்

பேரம் 

நம்ம ஆளு ஒருத்தர்,
பாலஸ்தீன நாட்டுக்கு உல்லாசப் பயணம் சென்றார்.
அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது. இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை....
"படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.
"இருபது டாலர்" என்று அவன் சொன்னான்.
"இந்த தொகை மிகவும் அதிகம்" என்று வாதிட்டார் நம்ம ஆள்.
”அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்”என்றான் படகோட்டி.
’நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்’என்றார் நம்ம ஆள்.
”ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார், தெரியுமா?”என்று கேட்டான் படகோட்டி.
அதற்கு நம்ம ஆள் சொன்னார்,
"ஆமாம் ... நீங்கள் படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால், ஏசு நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!"

No comments:

Post a Comment