முதல் நிறுத்தம்
முன்னுரையில் சொன்னது போலே (அ) அட அப்படியா [exclaim] (ஆ) அட ஆமாயில்ல [recalled exclaim] (இ) அட போங்கய்யா [getting tired] (ஈ) அடடே சொல்லுப்பா [educative] என்கிற ரகமாக எழுத விழைகிறோம்.
பெருமை மிகு இந்தியன் ரயில்வே
நமது பாரத தேசத்தின் மிக பெரிய பெருமை இந்தியன் ரயில்வே. சமீபத்திய கணக்கிட்டீன் படி (2014-15) கீழ்காணும் தகவல்களை பாப்போம். (நன்றி விக்கிபீடியா)
உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களை பட்டியிலிட்டால் நமது ரயில்வே துறை ஏழாவது இடத்தில் இருக்கிறது. சுமார் பதினான்கு கோடி ஊழியர்களை கொண்டது. மிக முக்கியமான விஷயம் தமது ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னமும் ஒய்வு ஊதியம் தருகிறது.
ஒரு பயணி
ரயிலில் ஏறும் முன்னர் நாம் சரியான ரயிலில் ஏறுகிறோமா என்று ஒரு சந்தேகம்
இருக்கும். இந்தப் படங்களை பாருங்கள்.
முன்னுரையில் சொன்னது போலே (அ) அட அப்படியா [exclaim] (ஆ) அட ஆமாயில்ல [recalled exclaim] (இ) அட போங்கய்யா [getting tired] (ஈ) அடடே சொல்லுப்பா [educative] என்கிற ரகமாக எழுத விழைகிறோம்.
பெருமை மிகு இந்தியன் ரயில்வே
நமது பாரத தேசத்தின் மிக பெரிய பெருமை இந்தியன் ரயில்வே. சமீபத்திய கணக்கிட்டீன் படி (2014-15) கீழ்காணும் தகவல்களை பாப்போம். (நன்றி விக்கிபீடியா)
மொத்த இருப்பு பாதைகளின் நீளம்
|
115,000 km
|
இருப்பு பாதைகள் இணைக்கும் தூரம்
|
65,436 km
|
ஒரு ஆண்டிற்கு சராசரியாக சுமக்கும்
மனிதர்களின் எண்ணிக்கை (இதில பாருங்க இந்திய மக்கள் தொகையே 120 கோடிதான்). சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் எட்டு முறை
பயணம் செய்ததாக கொள்ளவேண்டும்.
|
840 கோடி
|
பயணிகள் மூலம் வருவாய் (ஆண்டிற்கு)
|
ரூ 4000 கோடி
|
என்ஜின்களின் எண்ணிக்கை
|
9,013
|
பயணிகளுக்கான பெட்டிகள்
|
62,924
|
பயனிக்களுக்கான ரயில்களின் எண்ணிக்கை
|
12,617
|
உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களை பட்டியிலிட்டால் நமது ரயில்வே துறை ஏழாவது இடத்தில் இருக்கிறது. சுமார் பதினான்கு கோடி ஊழியர்களை கொண்டது. மிக முக்கியமான விஷயம் தமது ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னமும் ஒய்வு ஊதியம் தருகிறது.
“One more feather in my cap” அதாவது என்னுடைய
தொப்பியில் மேலும் ஒரு இறகு, என்று தமக்கு சேரும் பெருமையை ஒருவர்
கொண்டாடுவார். அப்படி பார்க்கையில் நமது
ரயில்வே துறைக்கு தொப்பியே சிறகில் தான் செய்ய வேண்டும். அவ்வளவு பெருமைகள் கொண்ட மிகப்பெரிய துறை.
சரி மேலே சொன்ன தொகைகள் எல்லாம் கோடியில்
இருக்கின்றதே என்பது பற்றி பார்ப்போம். பல ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசின்
ஒரு ஊழல் பற்றி மிக பிரபலமாக பேசப்பட்டது. அப்போது அந்த ஊழலின் மதிப்பு நூறு கொடி.
அதை பற்றி நமது மக்கள் ஒன்றும் சீரியாசாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒரு ஆதங்கம்
கம்யுனிஸ்ட் தோழர்களுக்கு இருந்தது. மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று
கொஞ்சம் தோண்டிப் பார்த்தல் நூறு என்னும் எண் மிக சிறியதாக உணரப்பட்டது அதற்கு
பின் இருக்கும் கோடி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என உணர்ந்தார்கள்.
அப்படியானால் கோடி என்பது வைத்து ஐந்து பெரிய ஆஸ்பத்திரிகள் கட்டலாம். பதினோரு
பள்ளிக்க்கூடங்கள் கட்டலாம். இருபதுக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் கட்டலாம் (அட இது
அந்தகாலத்து கணக்கு) என்று எடுத்து சொன்னார்கள். சரி இதில் அரசியலை கொஞ்சம் தள்ளி
வைப்போம். கோடி என்பதையும் நாலாயிரம் கோடி என்பதையும் மனத்தில் கொள்வோம்.
சேவை நோக்கம்.
நமது பார்லிமெண்டில் நிதி தவிர எந்த துறைக்கும்
தனியாக பட்ஜெட் தாக்கல் செய்வது இல்லை. ஆனால் விதிவிலக்காக ரயில்வே துறை பட்ஜெட்
தாக்கல் செய்யும். அதிலும் பொருளாதார பட்ஜெட் வாசிப்பதற்கு (ஆம் வாசிப்பதற்கு
என்றுதான் சொல்கிறோம்) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அப்படியானால்
நாட்டின் மிக மிக முக்கியமான அங்கம் இந்த ரயில்வே துறை என்பது புரியும். அதிலும்
பயணிகள் தொடர்பான போக்குவரத்தும் அவர்களுக்கு என்று மெனக்கேடுவதுமே மிக அதிகம்.
மேலே சொன்ன பயணிகள் வருவாய் என்பது வெறும் 25% வருவாய் தான். ஆனால்
அதற்கு எண்பது சதவீத உழைப்பை ரயில்வே துறை செலவிடுகிறது. சொல்லப்போனால்
நஷ்டத்திலேயே பயணிகள் சேவை நடக்கிறது என்றாலும் சேவை நோக்கிலேயே ரயில்வே துறை
பயணிகள் சேவையை தொடர்கிறது. அதாவது எப்படி ராணுவம் மருத்துவம், கல்வி என்று சேவை
செய்கிறதோ அப்படியே பயணிகள் போக்குவரத்தும் சேவை என்கிற ஒன்றுதான். இதில் வணிக
நோக்கம் எதுவுமில்லை (No
commercials). கொஞ்சம் மேல் நோக்கி போனால் பயணிகள் சேவை சரக்கு சேவை என்று
இரண்டாக பிரித்தால் பயணிகள் சேவை வருவாயின்றி மிக செலவு வைக்கும் ஒன்று என நன்றாக
உணர முடியும்.
ஆகையினாலே எல்லோரும் ரயில்வே என்ன செய்கிறதோ அதை
பொறுத்துக் கொள்ளுங்கள் என சொல்வதாக கொள்ளாதீர்கள். அவற்றை நாம் குறைகள் என்று
சொல்லாமல் Scope for Improvement என சர்க்கரை தடவிய கசப்பு மாத்திரைகளாக தருவோம்.
ரயிலில் ஏறுவதற்கு/(ள்) நாம் படும் பாடு
இவை சமீபத்தில் நாம் எடுத்த படங்கள். முதல் படம் நெல்லை எக்ஸ்பிரஸின் போர்டு. இரண்டாவது படம் சேரன் எக்ஸ்பிரஸின் படம். ரயில் பிளாட்பாரத்தில் நிற்கிறது. பயணி போர்டை பார்க்கிறார். இது செங்கோட்டை செல்லும் வண்டிய இல்லை சென்னை செல்லும் வண்டியா? இது கோயம்புத்தூர் செல்லும் வண்டியா இல்லை அஹமதாபத் செல்லும் வண்டியா? குழம்புகிறார். என்னதான் மைக்கில் சொன்னாலும் உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.
சரி, ரயில்வே ஏனிப்படி குழப்புகிறது என்று பார்த்தால், இந்த தொடர் வண்டி முதலில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்து, பின்னர் இதே தொடர் சென்னயிலிருந்து அகமதாபாத்திற்கு செல்கிறது என்பதாக திட்டமிட்டு இருக்கிறார்கள். மிக நல்லது. அப்படியானால் வண்டி கிளம்பவிருக்கும்போது சரியான போர்டை மட்டும் மாட்டக்கூடாதா. நீங்கள் (ரயில்வே) உங்கள் வேலையை மிச்சபடுத்த ஏன் பயணிகளை குழப்புகிறீர்கள். அதுவும் கூட இப்போதெல்லாம் டிஜிட்டல் டெக்னாலஜி வந்து விட்டது அதிலும் LCD என்று சொல்லகூடிய வகையில் செய்ய முடியும். எளிதில் படிக்க கூடிய கருப்பு வெள்ளை திரையுடனும்(பகலில் நன்கு தெரிவதற்காக) ஒளிரும் திரையுடனும் (இரவில் தெளிவாக தெரிவதற்காக) எல்லா பெட்டிகளின் பக்கவாட்டிலும் இதனை அமைக்கலாமே. வேண்டுமானால் இதனையும் வணிக நிறுவனங்களிடம் ஸ்பான்சர் செய்ய கேட்கலாம்.
சரி, ரயில்வே ஏனிப்படி குழப்புகிறது என்று பார்த்தால், இந்த தொடர் வண்டி முதலில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்து, பின்னர் இதே தொடர் சென்னயிலிருந்து அகமதாபாத்திற்கு செல்கிறது என்பதாக திட்டமிட்டு இருக்கிறார்கள். மிக நல்லது. அப்படியானால் வண்டி கிளம்பவிருக்கும்போது சரியான போர்டை மட்டும் மாட்டக்கூடாதா. நீங்கள் (ரயில்வே) உங்கள் வேலையை மிச்சபடுத்த ஏன் பயணிகளை குழப்புகிறீர்கள். அதுவும் கூட இப்போதெல்லாம் டிஜிட்டல் டெக்னாலஜி வந்து விட்டது அதிலும் LCD என்று சொல்லகூடிய வகையில் செய்ய முடியும். எளிதில் படிக்க கூடிய கருப்பு வெள்ளை திரையுடனும்(பகலில் நன்கு தெரிவதற்காக) ஒளிரும் திரையுடனும் (இரவில் தெளிவாக தெரிவதற்காக) எல்லா பெட்டிகளின் பக்கவாட்டிலும் இதனை அமைக்கலாமே. வேண்டுமானால் இதனையும் வணிக நிறுவனங்களிடம் ஸ்பான்சர் செய்ய கேட்கலாம்.
வண்டி அடுத்த நிலையதிற்கு நகர்கிறது (தொடரும்)




