Sunday, March 26, 2017

நாமாவது நன்கு இருப்போமே

கஞ்சிக்கு வழியுமில்லை
கச்சை கட்ட துணியுமில்லை
கையிலே காசு இல்லை
கதறக்கூட திராணியில்லை
கட்டிய கணவனிடம்
கையேந்தி கெஞ்சுகிறாள்
கால்காசு கொடுமையா
கைபிள்ளை அழுகுதென்று
காலாலே உதைத்து சொன்னான்
கையில் ஏதுமில்லையென்று
கருமத்தை நொந்துகொண்டு
கைமாத்து வாங்கி வந்தாள்
கண்ணிமைக்கும் நேரத்திலே
கை திருகி பிடுங்கிசென்றான்
கள் குடிக்கும் கடையினிலே
கடன் தர மாட்டானென்று
கவுரவமாய் குடித்துவிட்டு
கால்வாயிலே தவழ்ந்திருந்தான்
கட்டிய மனைவி அவள்
கண்ணீரில் நனைந்திருக்க
நாகரிகமாய் சென்றோ
நாற்றமுடன் வந்திருந்தான்
நாம் சொல்லி திருந்துவானோ
நாட்கள்தான் திருத்திடுமோ
நமது அண்ணல் இருந்திருந்தால்
நரன் இவனை துவைத்தெரிந்து
அஹிம்சை எல்லாம் அப்புறம்தான்
ஒழுக்கம்தான் முதலில் என்பார்
வெட்கம் கெட்ட செயலன்றோ
நாகரிகம் எனும் பெயரில்
நாறிபோன சமூகமோ
நாடு மாற நினைப்போமே
நாமாவது நன்கு இருப்போமே

No comments:

Post a Comment