My post in Face book -> January 2013
பக்திப்பரவசம் கொண்ட கதிர்காமம் மனதை விட்டு நீங்காத கோவில்.
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் பக்தியோடு அந்த முருகனை வழி பட்டு நிம்மதி அடைவார்கள்
அவன் புகழை பாடி அவன் இடத்தில் அமர்ந்தாலே நாம் தோஷங்கள் யாவும் நீங்கி உடல் நோய் மாறி மக்களை நிம்மதி அடையச்செய்யும் சக்தி கொண்ட கதிர்காமககந்தன் அவன் அருளை வேண்டிட மக்கள் அலை போதும் திருத்தலம் கதிர்காமம்.
கதிர்காமம் ஊவா மாகாணத்தில் புத்தளப்பிரிவில் உள்ள தியகம என்னும் வனாந்திரப் பிரதேசத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில் அமைந்துள்ளது
கதிர்காமத்தை சுற்றி பல கோவில்கள் உள்ளன இதில் கதிர்காம சந்நதி . வள்ளியம்மை சந்நதி என்ற கோவில் உள்ளது.
ஒவ்வொரு நோய்களை தீர்த்துவைக்கும் பக்தியான முருகனிடம் வேண்டுதல் செய்து காவடி, கற்பூரச்சட்டி, பாத யாத்திரை என்று நேத்திக்கடன்களை முடித்துவைப்பதற்கே அங்கு பக்தர் கூட்டம் ஒவ்வொரு நாளும் காணலாம்
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் பக்தியோடு அந்த முருகனை வழி பட்டு நிம்மதி அடைவார்கள்
அவன் புகழை பாடி அவன் இடத்தில் அமர்ந்தாலே நாம் தோஷங்கள் யாவும் நீங்கி உடல் நோய் மாறி மக்களை நிம்மதி அடையச்செய்யும் சக்தி கொண்ட கதிர்காமககந்தன் அவன் அருளை வேண்டிட மக்கள் அலை போதும் திருத்தலம் கதிர்காமம்.
கதிர்காமம் ஊவா மாகாணத்தில் புத்தளப்பிரிவில் உள்ள தியகம என்னும் வனாந்திரப் பிரதேசத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில் அமைந்துள்ளது
கதிர்காமத்தை சுற்றி பல கோவில்கள் உள்ளன இதில் கதிர்காம சந்நதி . வள்ளியம்மை சந்நதி என்ற கோவில் உள்ளது.
ஒவ்வொரு நோய்களை தீர்த்துவைக்கும் பக்தியான முருகனிடம் வேண்டுதல் செய்து காவடி, கற்பூரச்சட்டி, பாத யாத்திரை என்று நேத்திக்கடன்களை முடித்துவைப்பதற்கே அங்கு பக்தர் கூட்டம் ஒவ்வொரு நாளும் காணலாம்
எனக்கு சற்றே புரியாத விபரங்கள்
1. இந்த கோவிலில் எந்த சந்நிதியிலும் விக்ரக வழிபாடு காணவில்லை. ஒரு படுதாவில் (ஸ்க்ரீனில்) சமிக்கி வேலைப்பாடுகளுடன் ஆறுமுகன் படம் வள்ளி தெய்வானையுடன் வரையப்பட்டுள்ளது. அந்த படுதாவை மட்டுமே எல்லோரும் வணங்குகிறார்கள். என்ன காரணம்? விக்ரகங்கள் இருந்து ஏதாவது யுத்தத்தில் சேதப்படுத்தப்பட்டதா? அல்லது அத்தகைய நுட்பமே அறிமுகப்படுதப்படவில்லையா?
2. இந்த கோவிலை எல்லா மக்களும் வணங்கினாலும் தமிழர்களுக்கான கடவுளாகவே நாம் அறிந்திருக்கிறோம். அப்படி இருக்க ஒரு அறிவிப்பு கூட தமிழில் செய்வது இல்லை. இத்தகைய பாதிப்பு சமீபத்தில்தான அல்லது மிக நீண்ட நாட்களாகவே இப்படித்தானா?
வியப்புறும் செய்திகள்
ஒவ்வொரு பக்தரும் அங்கே இருக்கும் கடைகளில் வித விதமாக பழங்களை வாங்கி முருகனுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். இதில் என்ன வியப்பெனில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தட்டின் அளவும் பழங்களின் வகையும் அதிகரிப்பதுதான். நங்கள் வாங்கிய தட்டின் அளவு ஒன்றரை அடி விட்டமுள்ளது. ஒரு குடும்பத்தினர் சுமார் ஐந்தரை அடி விட்டமுள்ள தட்டு நிறைய வழியும் அளவிற்கு பழங்கள் வாங்கி காணிக்கை செலுத்தினார்கள். நான் நினைக்கிறேன்.. ஒரு காட்டுகோவிலாக இருந்து காட்டுக்குள் இருந்து கிடைக்கும் பொருட்களை மட்டுமே காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். அதுவே இன்றைய நாகரிக உலகில் கடையில் வாங்குகிறோம் போலே!
சாமிக்கு பின்னாலே (திரைக்கு பின்னாலே) நைவேத்யம் பண்ணுகிறார்கள். பக்தி பரவசத்துடன்..அங்கே சிலை இருக்கிறதோ என்று பார்த்தேன். இல்லை. ஆனால் ஒரு சட்டத்திற்குள் (பிரமேக்குள்) வெள்ளியாலான அலங்காரத்துடன் முருகன் படம் இருக்கிறது.
இன்னொரு விஷயமும் பகிர்ந்திட வேண்டும். அப்படி கொண்டு வந்த பழங்களை ரொம்ப நேரம் கைகளில் சுமக்க முடியவில்லை என்றால் அதற்கென வரிசையாக கண்ணாடி பெட்டி வைத்து டோகேன் போட்டு கொடுக்கிறார்கள். நாம் எல்லா சந்நிதிக்கும் போய்விட்டு வந்து வாங்கி கொண்டு பிறகு முருகன் சந்நிதிக்கு போகலாம்.
இவ்வளவு மலை மலையாக பழங்களை வாங்கி கோவில் நிர்வாகம் என்ன செய்யும் என்று எனது நண்பரிடம் விசாரித்தேன். அவர் சொன்னார் இவற்றையெல்லம் விலங்குகள் பரமரிப்புக்கென்று வைத்துகொள்கிறார்கள் என்று. நம்புவோம் மறு சுழற்சி ஆகவில்லை என்று.
கோவிலில் கோபுரம் முறையும் இல்லை. ஒரு விதமான கேரளா முறையிலேயே கட்டப்பட்டுள்ளது சந்நிதி.
அருகே ஓடும் மாணிக்க கங்கை என்னும் ஆறு. அதில் மீன்கள் மிக அருமையாக கரை ஓரம் கொத்து கொத்தாக வந்து பொரி சாப்பிட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மீனும் ஒரு சராசரி மனிதனின் புஜங்களின் அளவில் இருக்கிறது. அதுவும் இன்றைக்கு நாங்கள் பார்க்கயிலே வெள்ளம் மிகுந்த சீற்றத்துடன் சென்று கொண்டு இருந்தது. அதிலும் ஒரே இடத்தில் சமாளித்து நின்று பொரி சாப்பிடுகின்றன.
ஒரு யானை குட்டி (சற்றே பெரியது) மிக வேகமாக நடந்து வந்து ஒரு சந்நிதியின் வாசலில் மிக நேர்த்தியாய் உட்கார்ந்து வணக்கம் செலுத்தி பின் மிக வேகமாக எழுந்தது. வியந்து போனேன். இந்த யானை குட்டி என்ன ரஜினி வேகத்தில் வருகிறது என்று வியந்தேன்
மற்றுமொரு பெரிய யானை அதன் தந்தம் மிக அழகாக பின்னிக்கொண்டிருந்தது. மிக லாவகமாக தும்பிக்கையை வெளியே போடவும் உள்ளே போடவும்.. அடடா என்ன அற்புத காட்சி!
யானை கால்களுக்கிடையில் போய் வந்தால் ஏதோ தோஷம் விலகுமாம். ஒரு நம்பிக்கை.. இங்கிருக்கும் மக்களுக்கு. செய்கிறார்கள்.. பாகன் நம்பிக்கையில் அவர்களும் சுற்றி வருகிறார்கள் (அப்புறம் என்ன பாகனுக்கு வருமானம்தான்)
மிக முக்கிய செய்தி. இந்த கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும், காலை 10.30 மணிக்கும் பின்பு மாலை 6.30 மணிக்கும் பூஜை செய்கிறார்கள். மனிதர்கள் மிக நீ........ண் ........ட வரிசையில் நிற்கிறார்கள். பழங்களையும் சுமந்து கொண்டு நிற்கிறார்கள். வரிசை மீறுவது இல்லை. வி ஐ பி என்று யாரும் உள்ளே நுழைவது இல்லை. அர்ச்சனை சீட்டு கிடையாது. தரிசன கட்டணம் கிடையாது. அபிஷே கம் கிடையாது (சிலை இல்லேன்னாலும் வேலுக்கு அபிஷேகம் பண்ணுவாங்களோன்னு நினைச்சேன்). அதை விட முக்கியம்.. நேரம் முடிந்து விட்டது என்று சந்நிதியை மூட மாட்டார்கள். வரிசை கடைசி ஆள் வரை அனுமதி தருகிறார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம் ஒரு குடும்பம் 9.20 மணிக்கு (இரவு) சாவகாசமாய் பழங்கள் வாங்கி 1001வது ஆளாக வரிசையில் சேர்ந்துகொள்கிறார்கள்.
மேலும் ஒரு தகவல்
இதற்கு முந்தய ஒரு இடுகை பகிர்தலிலே குமரிக்கோட்டம் மூலமாகதான் நாம் பஞ்சாங்க முறையை பின்பற்றினோம் என்று சொல்லப்பட்டு இருந்தது. இந்த கதிர்காமதிற்கும் அதில் தொடர்பு இருந்ததாக கேள்விப்படுகிறேன். எனக்கு தெரிந்த ஒரு ஜோதிட கலா பூஷணி ஒரு தகவல் தெரிவித்தார். அவருடைய தகப்பனார் (அவரும் ஜோதிட வல்லுநர்) கதிர்காம பஞ்சாங்கம் ஒன்றை மட்டும்தான் கணக்கில் கொண்டு பழங்கள் சொல்வாரம். இப்பொழுது கதிர்காம பஞ்சாங்கம் புழக்கத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
எனது நண்பர்களே உறவினர்களே நலம் விரும்பிகளே நல்லோர்களே வல்லோர்களே ..... இத்தனை நேரம் பொறுமை காத்து என்னுடைய இந்த இடுகையை படித்தமைக்கு மிக்க நன்றி.
No comments:
Post a Comment