ஸ்ரீராமாயணம் யுத்தகாண்டத்தில் இலங்கைக்கு போக பாலம் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றது.சுக்ரீவனின் கோஷ்டியில் நலன் ன்னு ஒரு வானரம் இருக்கு.அது தான் அங்கே சிவில் இன்ஜினியர் போலிருக்கு.அவர்(அது)சொல்றார் நான் விரைந்து கற்களை அடுக்குவேன் அதற்கு இணையாய் வேகமாய் மலைகளையும் கற்களையும் கொண்டுவந்து சேர்க்கணும் ன்னு கண்டிசன் போடறார்.அந்த வானரசேனையோ அவரையே திருப்பிக்கொண்டு நாங்கள் போடும் வேகத்துக்கு நீ சீக்கிரம் அணை காட்டுவியா ன்னு கேக்கறா.எல்லாம் ராமசேவைல உள்ள உத்சாகம் தான் காரணம்.சரி இப்போ குரங்குகள் மலை மலையாய் கற்களைக் கொண்டுவந்து கொட்டகொட்ட நலன் வரிசையா அடுக்குகிறார்.ஆனால் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அடைக்க யாரும் முயற்சிக்கலையாம்.இதை கரைல நின்னு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அணில் யோசித்ததாம் எப்படி அடைக்கலாம் ன்னு.கையாலோ வாயாலோ மண் கொண்டுபோய் கொட்டினால் முடியாதுன்னு புரிஞ்சுண்டு ஓடிப்போய் கடலில் ஒரு முழுக்குப் போடும்.கரைல உள்ள மணல் ல புரளும்.ஒவ்வொரு கல்லுக்கு இடுக்கிலும் போய் உடம்பை உதறிக்கொண்டு மணலை உதிர்த்துவிட்டு மீண்டும் குளிக்கும் .மணலில் புரண்டு கற்களுக்கு நடுவில் போய் கொட்டும்.என்னே ஒரு ராமசேவை.வானரசேனை இங்குமங்கும் தாவித்தாவி மலைகளைக் கொண்டுவந்து போடும்போது இந்த அணில் நடுவில் மாட்டிகிட்டு என்னவாகுமோ ன்னு நினைக்காம உயிரைப் பணயம் வெச்சு செய்த சேவைக்கு பரிசாக ஆழ்வார் பாசுரத்தில் இடம் பெற்று விட்டதே இந்தஅணில்.
திருமாலை ல தொண்டரடிப்பொடியாழ்வார் இப்படிப் பாடறார்
திருமாலை ல தொண்டரடிப்பொடியாழ்வார் இப்படிப் பாடறார்
குரங்குகள் மலையை நூக்க
குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்கநீர்அடைக்கலுற்ற
சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலியநெஞ்ச
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்குஆட்செய்யாதே
அளியத்தேன் அயர்க்கின்றே
குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்கநீர்அடைக்கலுற்ற
சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலியநெஞ்ச
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்குஆட்செய்யாதே
அளியத்தேன் அயர்க்கின்றே
No comments:
Post a Comment