Sunday, August 23, 2020

கடவுளைக் காண முடியுமா?

 கடவுளைக் காண முடியுமா?

திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து …

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?” என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள் “உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ….,

ஒரு கேள்வி, தம்பீ……!


🙏அ 

இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”


எனக்கென்ன கண் இல்லையா…….?


இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” …!!


🙏ஆ 

“தம்பீ……!


கண் இருந்தால் மட்டும் போதாது……!!


கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!!


காது இருந்தால் மட்டும் போதுமா…..?


காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!


🙏இ 

அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!!


அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!!


உடம்பை நீ பார்க்கின்றாய்….!!


இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?”


“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”


“அப்பா…! அவசரப்படாதே…..!!


எல்லாம் தெரிகின்றதா….?”


🙏ஈ 

“என்ன ஐயா….!


தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….?


எல்லாம்தான் தெரிகின்றது….?”


“அப்பா….!


எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”


“ஆம்! தெரிகின்றன.”…..!!


“முழுவதும் தெரிகின்றதா…?”


🙏உ 

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,


“முழுவதும் தெரிகின்றது” என்றான்….!!


“தம்பீ…!


உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”


மாணவன் விழித்தான்.


“ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” “என்றான்.


தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!!


🙏ஊ 

இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!!


சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”


“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!!


நிதானித்துக் கூறு….!!.”


“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!!


எல்லாம் தெரிகின்றது.’…!!’


🙏எ 

“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?


மாணவன் துணுக்குற்றான்.


பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,


“ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.


🙏ஏ 

“குழந்தாய்…!


இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!!


முன்புறம் முகம் தெரியவில்லை……!!


நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!!


இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!


🙏ஐ 

அன்பனே…!


இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,


இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.” …!!


🙏ஒ 

இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,


இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,


ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”


ஒரு கண்ணாடி…..


திருவருள்….!!


மற்றொன்று….


குருவருள்…….!!


🙏ஓ 

திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,


“ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்”….!!


🙏ஔ 

“தம்பீ…..!


“திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்”……,


அதனைக் “குருவருள் மூலமே பெறமுடியும்”…..!!


” திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”…..!!!


அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்…..!!


No comments:

Post a Comment