'டோல்கேட்' கட்டணம் தடை கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க அவகாசம் Thanks to Dinamalar
http://www.dinamalar.com/news_detail.asp?id=1447781
மதுரை: நான்குவழிச் சாலைகளில் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ.,வெங்கட்ரமணா தாக்கல் செய்த மனு:
மத்திய அரசின் சாலை போக்குவரத்துத்துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 60 கி.மீ., இடைவெளிக்கும் 'டோல்கேட்' மூலம், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். 'டோல்கேட்' மூலம் ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு சாலை வரியாக 6 ரூபாய் வசூலிக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 25ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்தியாவில் 1980 க்கு முன், வாகன உற்பத்தி ஆண்டுக்கு 2 லட்சமாக இருந்தது. தற்போது 6 கோடியாக உயர்ந்துள்ளது. வாகன விற்பனை மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதனால் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் (மதுரை உட்பட 13 மாவட்டங்கள்) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) அல்லது ஏஜன்ட் மூலம் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். 'தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 (டோல் கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல்) செல்லாது' என உத்தரவிட வேண்டும். இவ்வாறு, வெங்கட்ரமணா மனு செய்திருந்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர், ''இவ்வழக்கு 2015 செப்டம்பரில் தாக்கல் செய்தும், இதுவரை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை,'' என்றார். மத்திய அரசு பிப்.,18ல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1447781
மதுரை: நான்குவழிச் சாலைகளில் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ.,வெங்கட்ரமணா தாக்கல் செய்த மனு:
மத்திய அரசின் சாலை போக்குவரத்துத்துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 60 கி.மீ., இடைவெளிக்கும் 'டோல்கேட்' மூலம், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். 'டோல்கேட்' மூலம் ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு சாலை வரியாக 6 ரூபாய் வசூலிக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 25ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்தியாவில் 1980 க்கு முன், வாகன உற்பத்தி ஆண்டுக்கு 2 லட்சமாக இருந்தது. தற்போது 6 கோடியாக உயர்ந்துள்ளது. வாகன விற்பனை மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதனால் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் (மதுரை உட்பட 13 மாவட்டங்கள்) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) அல்லது ஏஜன்ட் மூலம் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். 'தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 (டோல் கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல்) செல்லாது' என உத்தரவிட வேண்டும். இவ்வாறு, வெங்கட்ரமணா மனு செய்திருந்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர், ''இவ்வழக்கு 2015 செப்டம்பரில் தாக்கல் செய்தும், இதுவரை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை,'' என்றார். மத்திய அரசு பிப்.,18ல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment