Saturday, December 12, 2015

கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்(று) - Thanks to Vikatan

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113428&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5
யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
நாம பெரிய புத்திசாலின்னு காட்டிக்கிறதுக்காக அடுத்தவரை கேலி செய்யறதும், நக்கல் பண்றதும் எவ்வளவு பெரிய தப்புங்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம்.
‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்கிற திருக்குறளை ஞாபகப் படுத்தி, தன் கருத்துக்களை இ-மெயில் பண்ணியிருந்தார் சுரேஷ். நானோடெக்னாலஜி மூன்றாம் வருடம் படிக்கிறாராம். (நானோ டெக் மாணவர் திருக்குறளை உதாரணம் காட்டுறது ஒரு சுவாரஸ்ய பொருத்தம்தானே?!)
அச்சாணி ஒரு சாண்தான். ஆனா, அதுதான் அவ்ளோ பெரிய தேர் ஓடுறதுக்குத் துணை புரியுது. ஒரு பெரிய இயந்திரத்துல இருக்கிற ஒரு சின்ன நட்டு கழண்டு போனாலும், இயந்திரம் மக்கர் பண்ணும். ஒரு சின்ன ‘சிப்’புக்குள் ஆயிரம் ஆயிரம் தகவல்களைப் பதிஞ்சு வைக்க முடியுற கணினி யுகத்துல இப்ப நாம வாழ்ந்துட்டிருக்கோம்!
ஆக, யாரையும் எதையும் உருவத்தைப் பார்த்துக் கேலி செய்யறதுக்கோ, இவனுக்கு இவ்வளவுதான் தெரியும்னு ஜட்ஜ் பண்றதுக்கோ நமக்கு யோக்கியதை உண்டா?
சுரேஷ் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமானது. அவங்க ஃபேமிலி யோடு ஏதோ ஒரு ஃபங்ஷனுக்குப் போறதுக்காக ஏஜென்ஸிக்கு போன் பண்ணி, ‘கால் டிரைவரை’ வரவழைச்சிருக்காங்க. வழக்கம்போல சுரேஷோட அப்பா முன் சீட்டுல, டிரைவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, பேச்சுக் கொடுத்துட்டே வந்திருக்கார். வேலை, படிப்பு பத்தியெல்லாம் பேசும்போது, “ஏதோ படிச்சேன், மாஸ்டர் டிகிரி முடிச்சேன்; கிடைச்ச வேலையைச் செய்துட்டு வரேன். என்னையெல்லாம் பெரிய படிப்பாளின்னு சொல்லிக்கவே முடியாது. கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு!”ன்னு சொல்லியிருக்கார்.
உடனே சிரிச்சுட்டாராம் அந்த டிரைவர். “ஏம்ப்பா, இப்ப நான் என்ன சொல்லிட் டேன்னு நீ சிரிக்கிறே?”ன்னு கேட்டதுக்கு, “இல்லே… இந்த வசனத்தை நீங்களோ, நானோ, வேறு யாருமோகூட சொல்லத் தகுதியுண்டான்னு யோசிச்சுப் பார்த்தேன்”ன்னாராம். “ஏன், தன்னடக்கமாதானே சொன்னேன்? அதுக்குமா தகுதி வேணும்?”னு சுரேஷ் அப்பா கேட்டிருக்கார்.
“கண்டிப்பா! ‘அறிவாகிய மாபெரும் கடலில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான்’னு சொன்னார் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். ‘பாராட்டுற அளவுக்கு நான் எதுவும் சாதிச்சுடலை. ஆயிரம் படத்துக்கு இசை அமைச்சாலும் (இளையராஜாவின் இசையில் ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’) முதல் படத்தில் எந்த இடத்தில் நின்னேனோ, அதே இடத்தில்தான் இப்போதும் நின்னுட்டிருக்கேன்’னு சொன்னார் இசைஞானி இளையராஜா. அது தன்னடக்கம். அதுக்காக, கொட்டாங்கச்சி வயலினைக் காது கிழிய வாசிச்சுட்டு வரும் குடுகுடுப்பைக்காரர், ‘இசை என்னும் கடல்ல நான் வெறுமே காலை மட்டும்தான் நனைச்சிருக்கேன்’னு சொன்னா காமெடியா இருக்குமா இல்லையா? அது மாதிரிதான் இதுவும்!”னாராம் டிரைவர்.
“புரியலையே?”ன்னு சுரேஷ் அப்பா குழம்ப, “ஐயா! கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவுன்னு சொன்னது யார்?”னு கேட்டாராம் டிரைவர். “இப்ப நான்தான் சொன்னேன்!”னு சுரேஷ் அப்பா சொல்லவும், “அதில்ல சார், இந்த வசனத்தை முதல்ல சொன்னது யார்னு கேக்கறேன்?”னு மறுபடியும் கேட்டார் டிரைவர்.
யாருக்கும் எதுவும் தெரியலை. டிரைவரே தொடர்ந்து சொன்னாராம்…
“கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்!
ஔவையார் பாடல் இது. இதுலதான் நீங்க சொன்ன வசனம் வருது. அதாவது, ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவுன்னு அந்தக் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியே நினைச்சு, இன்னமும் படிச்சுட்டிருக்காளாம்! அப்படியிருக்கிறப்போ நாமெல்லாம் எந்த மூலைங்க ஐயா?”ன்னு அந்த டிரைவர் கேட்கவும், ‘தெய்வமே, நீங்க எங்கியோ போயிட்டீங்க!’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாராம் சுரேஷ்.
“அப்புறம் விசாரிப்பதான் தெரிஞ்சுது, அந்த டிரைவர் ஸ்கூல் படிக்கிறப்ப நம்பர் ஒன் ஸ்டூடன்ட்டா இருந்தவராம். வறுமை காரணமா மேலே படிக்க வசதியில்லாம டிரைவர் வேலைக்கு வந்துட்டாராம். ஆனாலும், ஆர்வம் காரணமா நாலடியார், பாரதியார் பாடல்கள்னு வாங்கிப் படிச்சிருக்கார். ‘இப்பவும் படிக்கிற ஆர்வத்தை விடாம ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா கதைகளையெல்லாம் தேடித் தேடிப் படிச்சுட்டிருக்கேன்’னு அவர் சொன்னப்போ, பிரமிப்பா இருந்ததோட, அவர் மேல பெரிய மரியாதையே வந்துச்சு எனக்கு”ன்னு சுரேஷ் எழுதியிருந்ததைப் படிச்சதும், அந்த டிரைவருக்கு மானசிகமா ஒரு சல்யூட் வெச்சு வணங்கத் தோணிச்சு எனக்கு.
- இன்னும் பேசலாம்…

இளைஞர்களுக்கு கிரிக்கெட் புயல் சச்சின் டெண்டுல்கர் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…
* பாசிட்டிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். தோல்விகள் தரும் கசப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் மட்டுமே விரட்ட முடியும்! பாசிட்டிவ் சிந்தனைகள் என்னில் தோன்றியிருக்காவிட்டால், இந்த வெற்றிகளை நான் எட்டிப் பிடித்திருக்க மாட்டேன்.
* வேறு யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அவர் ஒன்றில் திறமைசாலியாக இருந்தால், நீங்கள் வேறு ஒன்றில் திறமை மிக்கவராக இருப்பீர்கள். உங்களுக்கு எதில் அதிக ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்று அறிந்து, அதில் உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
* கிடைக்கும் வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கள்; இறுதிவரை போராடுங்கள். வெற்றிக்கான ரகசியம் இவ்வளவுதான்!
*  தீய பழக்கங்களையும் பெருமையாகக் கருதும் போக்கு ஆபத்தானது. என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், குழந்தைகள் என்பதால், அவர்களைத் தீய பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் எந்த விளம்பரத்திலும் நான் நடிப்பதில்லை.
*  பந்தை அடிக்கும்போது அடி எவ்வளவு பலமாக விழுந்தது, பந்து எந்தத் திசையில், எவ்வளவு தூரம் ஓடும் என்பதெல்லாம் எனக்குத்தான் தெரியும். எனவேதான், பொதுவாக நான் ‘பை-ரன்னர்’ வைத்துக்கொண்டது இல்லை. நானே ஓடி ரன் எடுக்கிறேன். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் பொருந்தும். நீங்களே அடியுங்கள்; நீங்களே ஓடுங்கள்!

பரிசு யாருக்கு?
சென்ற இதழ் சவால் கேள்வி நினைவிருக்கிறதா?
அரசன் தான் கண்ட கனவைச் சொல்லி, அது தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்கிறான். தர்க்கரீதியாக அந்தக் கேள்வியே தப்பு. கனவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கெல்லாம் விளக்கம் சொல்ல இயலாது. அரசன் கண்ட கனவை நிஜமாகவே நடைமுறைப்படுத்திப் பார்த்துதான் விடை காண இயலும்.
உயிருள்ள மீனோ, உயிரற்ற மீனோ… எந்த ஒரு பொருளும் தன் பருமனுக்கு நிகரான தண்ணீரை வெளியேற்றும் என்பதே ஆர்க்கிமிடிஸ் விதி!
இந்தச் சரியான விடையை அனுப்பி இருந்தவர் களில் சேலத்தைச் சேர்ந்த ப.ரகுராமன் என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சவால்!
ஒரு குறுகிய பாலம். பலவீனமான பாலம். ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே அதன் வழியாகப் போக முடியும். நல்ல இருளான நேரம். ஒரே ஒரு டார்ச் லைட் உள்ளது. அதன் துணையோடுதான், பாலத்தின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கு ஒரு பெரியவர், அவரின் மகன், மருமகள், பேத்தி, பேரன் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் போகவேண்டும்.
பாலத்தைக் கடக்க பெரியவருக்கு 12 நிமிடம் ஆகும்; அவரின் மகனுக்கு 8 நிமிடம்; மருமகளுக்கு 6 நிமிடம்; பேத்தி 3 நிமிடத்தில் கடப்பாள்; பேரனுக்கு ஒரே ஒரு நிமிடம் போதும்!
ஒரே நேரத்தில் இருவர் கடக்கும்போது, இருவரில் யார் அதிக நேரம் எடுப்பார்களோ அதையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பெரியவரும் பேரனும் சேர்ந்து பாலத்தைக் கடப்பதாக இருந்தால், கடக்கும் நேரம் 12 நிமிடம்.
கவனத்தில் கொள்ளுங்கள்… பாலம் 30 நிமிடத்தில் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனில், எவ்வளவு குறைந்த நிமிடத்தில் மொத்தக் குடும்பமும் அந்தப் பாலத்தைக் கடக்க முடியும்? வழிமுறை என்ன?
044-6680 2923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 
98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

Wednesday, November 25, 2015

வானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்!

வானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்! Thanks to VIKATAN :http://www.vikatan.com/news/tamilnadu/55531-anbumoni.artவானிலையை ரமணன் மட்டுமல்ல சாதாரண பாமரனும் கணிக்கலாம் அந்த அளவுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இது உங்கள் மொபைல் மற்றும் கணினியில் இணையத்தில் இயங்கும் செயலி அல்ல இந்த கணிப்பு முறை .நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கப்பெறும் படங்களால் என்பதால் கணிப்பும் தவறாக இருக்காது.இதை பெறுவதற்கு சாதாரண கணினி அறிவு போதுமானதே.
ஆயிரம் ரூபாயில் ஒரு கருவி
RTL-SDR எனப்படும் ஒரு USB DONGLE மற்றும் ஒரு  QHF (Quadrifilar Helix Antennas) ஆன்ட்டனா இரண்டையும் இணைக்க கொஞ்சம் கேபிள் வயர் என மொத்தமே ஆயிரம் ரூபாய்க்குள் தான் செலவாகும். இந்த கருவியானது வெளிநாடுகளில்  மிகப்பிரபலம்.இது வானிலைக்கு மட்டுமல்ல உங்கள் அலுவலக கதவை தொட்டால் உங்க ஸ்மார்ட் போனுக்கு தகவலை சொல்லும் கையில் ஒரு ட்ரில் இயந்திரத்தை இயக்கினால் அதன் வேகம் என்ன? என்பதை சொல்லும் இன்னும் பல பயன்கள் குறித்தும்  ஆராய்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. 
 
ஜெர்மனியில் உள்ள பேருந்துநிறுத்தங்களில் இந்த RTL-SDR கொண்டு எந்த பேருந்து எங்கு வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் எவ்வளவு நேரத்தில் இந்த பேருந்துநிலையத்தை அடையும் என்பதுவரை கணித்துக்கொண்டு இருக்கிறது.இதில் ஆர்.டி.எல். என்பது அந்த கருவியில் பயன்படுத்தப்படும் பிராஸசர்.  எஸ்.டி.ஆர் என்றால் software defined radio  ஆகும்.
சாதாரண ரேடியோ போல செயல்பாடு 
இப்ப வானிலைக்கு வருவோம் .பொதுவாக நீங்க ரேடியோ பயன்படுத்தி இருப்பீர்கள் ஏன் செல்போன் எப்படி வேலை செய்கிறதோஅதே தொழில்நுட்பம் தான் இது.  செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் ஒலிஅலைகள் எப்படி உங்கள் போன் வாயிலாக  செவிகளுக்கு கேட்க்கிறதோஅதே போல நம் பூமியை சுற்றிவரும் இந்த வானிலை செயற்கைக்கோள்கள்(WXsat)அனுப்பும் ஒலிஅலைகளை QHF ஆன்ட்டனா
ஒயர் வாயிலாக RTL SDR கருவியை அடையும் .அந்த ஒலி அலையை SDR SHARP என்ற செயலி வாயிலாக நீங்கள் நேரடியாக பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.வெறும் இரைச்சல் சத்தம் மட்டுமே கேட்க்கும்அந்த ஒலியை VIRTUAL CABLE வாயிலாக WXtoImg என்ற செயலிஒலியை நேரடியாக படமாக மாற்றித்தரும்WX என்பது WEATHER FAX என்பதை குறிக்கும்அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் லியோசர் செயற்கைக்கோள்களை (Low-Earth Orbiting Search And Rescue)அனுப்பியுள்ளனர்.
இந்த லியோசர் என்றால் பூமியை சுற்றிகொண்டே இருக்கும் செயற்கைக்கோள் அதனால் உலகின் எந்த ஒரு நாட்டின் வானிலையையும் இதன் மூலம் அறியலாம்.Gpredict என்ற செயலி உதவியோட இந்த நொடியில் செயற்கைக்கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்த்து தரவுகளை பெறலாம்.NOAA,Meteor,போன்றவை பிரபலமான லியோசர் வானிலை செயற்கைக்கோள்கள்இந்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அலைவரிசை எண் தகவல்கள்
NOAA 15 – 137.6200 MHz
NOAA 18 – 137.9125 MHz
NOAA 19 – 137.1000 MHz
Meteor - 137.100 or 137.900 MHz
இந்தியாவில் கல்பனா 1,இன்சாட் 3D போன்ற ஜியோசர் செயற்கைக்கோள்கள். (Geostationary Earth Orbit Search And Rescue)ஜியோசர் என்றால் பூமி எந்த வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் இந்த செயற்கைக்கோள்களும் சுற்றும் அதனால்இந்த நொடி நம் நாட்டின் வானிலைவானிலை நிலை என்ன? என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்இவை வானிலை ஆய்வு மையம் மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை பள்ளிகரணையில் செயல்பட்டுவரும்  தென் இந்திய தன்னார்வ வானொலி சமூகம் (Siars) இது குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பேராசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 
-கவின்

Thursday, September 17, 2015

வாகனக் கட்டணமா? வழிப்பறியா? டோல்கேட் தில்லுமுல்லுகள்! ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி




THANKS TO JUNIOR VIKATAN : 20-SEP-2015வாகனக் கட்டணமா? வழிப்பறியா?
டோல்கேட் தில்லுமுல்லுகள்!ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி
நாம் எந்த ஊருக்குப் பயணிப்பதாக இருந்தாலும், டோல்கேட் தாண்டியே செல்லவேண்டிய சூழலில் இருக்கிறோம். காரில் பயணிப்பதாக இருந்தாலும், பேருந்தில் போவதாக இருந்தாலும், நேரடியாக அல்லது மறைமுகமாக டோல்கேட் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும். உதாரணமாக, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல தனியார் பேருந்துக் கட்டணம் 600 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், அதில் 117 ரூபாய் டோல்கேட் சாலைகளுக்கான கட்டணமாக இருக்கிறது. தனியார் பேருந்துகளில் 30 சதவிகித கட்டண உயர்வு, டோல்கேட் கட்டண சாலைகளினால்தான்.
டோல்கேட் கட்டணம் என்பது, நாம் பயணிக்கும் சாலையின் பயன்பாட்டுக் கட்டணத்துடன், அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகளுக்குமான(!) வரியும் அடங்கும். என்ன கொடுமை என்றால், எந்த வாகனமாக இருந்தாலும் அது வாங்கப்படும்போதே, அதற்கான சாலை வரி கட்டப்பட்டுவிடுகிறது. அத்துடன், நாம் செலவழிக்கும் எரிபொருள் கட்டணத்தில் ஒவ்வொரு லிட்டருக்கும் குறிப்பிட்ட பகுதி சாலை வரிக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நாம் பயணிக்கும்போது, குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது. இந்தக் ‘குறிப்பிட்ட’ என்பதுகூட இடத்துக்கு இடம் கி.மீ., மாறுபடும். இதற்கு, அடிப்படை சாலைகள் அமைக்கவே அந்த வரித்தொகை போதுமானதாக இருக்கிறது; அதனால்தான் நெடுஞ்சாலைகளில் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அரசு காரணம் சொல்கிறது.
காலாவதியான உரிமம்
அந்தத் தொகையிலும் எந்த நிறுவனம் சாலை அமைக்கும் பணியைச் செய்கிறதோ அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சாலை அமைக்க செலவு செய்த தொகை, அதற்கான வட்டி, பராமரிப்புத் தொகை, முதலீடு  என வசூலிக்கும் பணத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும் உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமம் முடிந்து இன்னமும் குறிப்பிட்ட ஆண்டுகளைக் கடந்த பிறகும் பல இடங்களில் வசூல் நடந்து வருகிறது.
இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. இந்த டோல்கேட்களைக் கடந்துசெல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது டோல் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்கள் அதைக் கடைப்பிடிப்பது இல்லை. மத்திய அரசை ஏமாற்றி தங்களுடைய லாபக்கணக்கை முற்றிலுமாக மறைத்துவிட்டு நஷ்டத்தைக் காண்பிக்கிறார்கள். நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இந்தக் கட்டண உயர்வு அனுமதியைப் பெற்றுள்ளனர்.
 ஒரு டோல்கேட்டில் இருந்து மற்றொரு டோல்கேட்டுக்கு 60 கி.மீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சியில் இருந்து 10 கி.மீ தூரம் தள்ளித்தான் டோல் பூத் அமைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் சாலைகள் தோண்டப்பட்டுப் புதிய சாலைகள் போட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் எதையும், நெடுஞ்சாலை ஆணையமோ, குத்தகை எடுத்த நிறுவனங்களோ பின்பற்றுவது இல்லை.
வசூலை நிறுத்து...
பல நாடுகளில் டோல் சாலைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அந்த சாலைகளைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மற்ற மாநிலங்களைவிட கட்டணம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் 373 டோல்கேட் சாலைகள் இருக்கின்றன. அவற்றில் 41 சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தனியார் வசம் 29 சுங்கச்சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 12 சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. சராசரியாக ஒரு டோல்கேட்டில் ஒரு நாளைக்கு 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அடிக்கடி உயரும் எரிபொருள் விலை மட்டும் காரணம் இல்லை. மறைமுகமான டோல் கட்டணமும் அதற்கு ஒரு காரணம்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காருக்கு ரூ.710, லாரிக்கு ரூ.2,520 என்றும், சென்னையில் இருந்து திருச்சி வரை காருக்கு ரூ.310, லாரிக்கு ரூ.1,160 என்றும், சென்னையில் இருந்து கோவை வரை காருக்கு ரூ.474, லாரிக்கு ரூ.1,715 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாரிகளுக்கு ஆரம்பகாலத்தில் கிலோ மீட்டருக்கு 40 பைசா என்ற அளவில் இருந்த கட்டணத்தொகை இன்று இரண்டு ரூபாயைத் தாண்டுகிறது. இதனால்தான், பொதுமக்களின் தலையில் பொருட்களின் விலையேற்றமாக வந்துவிழுகிறது. காய்கறிகளின் விலை ஊருக்கு ஊர் வேறுபட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
விலை உயர்வுக்குக் காரணம்...
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் 1992-ம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதியும், 2008-ம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தச் சுங்கச்சாவடிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவிகிதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2008-ம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தச் சுங்கச்சாவடிகளில் 5 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் 3 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகம். மொத்த குறியீட்டு வேறுபாடு என்று மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சிமென்ட், பால் போன்ற 300 வகையான பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துக்கு தகுந்தவாறு அந்த வகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 40 சதவிகிதம் வரை கட்டண மாற்றம் இருக்கும். இதனால் அந்தப் பொருட்களுக்கான விலையிலும் மாற்றம் இருக்கும்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் கட்டணத் தொகையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 22 டோல்கேட்களில் எட்டு ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படும். ஆனால், குறைக்கும்போது ஒரு ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும். மதுரை, சேலம் மாவட்டங்களில் எல்லா பக்கமும் டோல்கேட்கள் இருக்கின்றன. டோல்கேட்டில் கழிப்பிடம், ஓய்வறை, தொலைபேசி, மருத்துவ வசதிகள் ஆகியவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், எத்தனை டோல்கேட் சாலைகளில் இந்த வசதிகள் உள்ளன?
மல்லுக்கட்டும் மதுரை
2012-ம் ஆண்டு திருமங்கலம் அருகே கப்பலூரில் நான்கு வழிச்சாலைக்கான டோல்பிளாசா அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டதில் இருந்து திருமங்கலம், பேரையூர், கல்லுப்பட்டி பகுதி மக்கள் பெரும்துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். விருதுநகரை நோக்கிச் செல்லும் நான்கு வழிச்சாலையைத் தாண்டி, ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது ஆரம்ப காலத்திலிருந்து உபயோகத்திலிருக்கும் சாலையாகும். இதனால் தென்காசி செங்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் போன்ற ஊர்களுக்கு வழக்கமான தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறவர்களும் டோல்கேட்டில் கட்டாயக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்கள்கூட அதனைத் தாண்டிச் செல்ல கட்டணம் கட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனால், சுங்கச்சாவடியை ஒட்டி 20 கி.மீ., சுற்றளவில் வசிப்பவர்கள் மாத சந்தா கட்டி பாஸ் வாங்கிக் கொள்ளலாம் என்கிற சலுகை குறித்து மக்களிடம் அதிக அளவில் விழிப்பு உணர்வு இல்லை. அதுபோல சில இடங்களில் 30 கி.மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே அடுத்த டோல்கேட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவர், வாகனக் கட்டணம் செலுத்தவில்லை என மறித்தனர். மாற்றுத்திறனாளிகளின் வாகனத்துக்குக் கட்டண விலக்கு உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எந்த அரசு உத்தரவையும் மதிக்காமல் அந்த நபரை அலைக்கழித்தார்கள்.
தொடரும் போராட்டம்...
மதுரை கப்பலூருக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களும் திருமங்கலத்தில் வசிப்பவர்களும் கட்டணம் கட்ட வற்புறுத்தப்பட்டார்கள். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஊர்மக்கள் திரண்டு டோல்கேட்டுக்கு எதிராக முற்றுகையிட்ட சம்பவங்களும் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை மதிக்காமல் டோல்கேட் ஊழியர்கள் உள்ளூர் மக்களிடம் கட்டணம் கேட்டு தினந்தோறும் தகராறு செய்து வருகின்றனர். காவல் துறையோ உள்ளூர் மக்கள் மீதே வழக்குப் போடுகிறது. உள்ளூர் மக்களிடம் சண்டை போட்ட ஊழியர்களே நியாயமான ஊதியம் வழங்கவில்லை என்று ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். அன்று மட்டும் எந்த வாகனத்துக்கும் கட்டணம் வாங்காமல் திறந்துவிட்டனர். அந்த ஐந்து மணி நேர போராட்டத்தால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின் சமாதானமானார்கள். அப்படி இருந்தபோதிலும் ஊர் மக்களுக்கும் இவர்களுக்குமான சண்டை தொடர்ந்துகொண்டேதான் உள்ளது.

Friday, September 11, 2015

விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் மூன்றுக்கும் மூன்று நிலை

http://rkthapovanam.blogspot.no/2012/02/blog-post.html

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருத்தமாக உபயோகப்படுத்தியிருப்பார். குருமகராஜ்(பரமஹம்ஸர்) எப்படி உவமைக் கதைகளைச் சொல்லி வந்தாரோ அதேபோல் பொருத்தமான கதைகளைச் சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவர் சுவாமிஜி. விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் மூன்றுக்கும் மூன்று நிலைகளைச் சொன்னவர் பெரிய சுவாமிஜி.  ஒவ்வொரு துறையிலும் அத்வைத நிலைக்கு வரும் வரையிலும் ஆனந்தம் கிடையாது. ஐக்கியப்படுத்திக் கொண்ட பின்புதான் முழுமையான ஆனந்தம் கிடைக்கும். இதற்கு சுவாமிஜி சொல்லும் கதை:-
வழிப்போக்கன் ஒருவன் சாப்பாடு கட்டிக்கொண்டு போகிறான். அப்போது அவன் வேறு உணவு வேறு; அது த்வைதம்.
பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து உணவைச் சாப்பிடுகிறான். இப்போது உணவு அவனுக்குள் இருக்கிறது; ஜீரணமாகி அவன்மயம் ஆகவில்லை எனினும் அவனுக்குள் இருக்கிறது; இது விசிஷ்டாத்வைதம்.
உணவு ஜீரணமாகி அவனோடு கலந்துவிடுகிறது; இது அத்வைதம்.
இப்படி சுவாமி விவேகானந்தரின் அறிவுமிக்க போக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் எளிமையான உவமைக்கதை வழியாக சுவாமி சித்பவானந்தர் அரிய உண்மைகளை விளக்கியுள்ளார்.
தமிழே தெரியாத என்னைத் தமிழிலே பேசச் சொல்லி, அன்பினை என்மேலே வாரிக்கொட்டி, என்னை பல புத்தகங்கள் எழுதவைத்து, என் மூலமாக அந்தர்யோகங்கள் நடத்துவதற்கும் வாய்ப்பு கொடுத்து, ஆனந்தமாக இருக்கச் சொல்லிய மகானுக்கு சிரத்தாஞ்சலி.
-டாக்டர். கே. சுப்பிரமணியம்,
முன்னாள் முதல்வர்,
ஸ்ரீ விவேகானந்த கல்லூரி,
திருவேடகம்.

Wednesday, September 9, 2015

உங்கள் தலைவர்களிடம் '9C' இருக்கிறதா?- நன்றி : விகடன்

http://www.vikatan.com/news/article.php?aid=52135


நன்றி : விகடன் வாசகர் பக்கம் நீங்களும் எழுதலாம்
உங்கள் தலைவர்களிடம் '9C' இருக்கிறதா?
பிரபல வேளாண்மை நிபுணர்களான லீ அயு கோக்கா மற்றும் தேரின் விட்னி ஆகிய இருவரும் இணைந்து 'Where Have all the leaders gone?' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டனர். இந்தப் புத்தகம் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தையும் பெற்றது.

தலைமை இல்லாமல் எந்த ஒரு நாடும் கிடையாது. தலைவர்கள் இல்லாமல் எந்த ஒரு நிர்வாகமும் இல்லை. தலைவர்கள் இல்லாமல் எந்த ஒரு அணியும் கிடையாது. அந்தளவுக்கு தலைமை என்பது மிக முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தொண்டர்களும் சரியாக இருப்பார்கள் என்பார்கள். தலைவரின் செயல்பாடுகளைப் பொருத்தே தொண்டர்களின் மனநிலையில் முன்னேற்றம் வரும். ஒரு சிறந்த தலைவர் என்பவர் யார்? அவரின் குண நலன்கள் எப்படி இருக்கும்? அவரிடம் உள்ள பண்புகள் என்ன? என்று பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஆராய்கிறது இந்நூல்.

அதோடு, ஒரு சிறந்த தலைவரிடம் இருக்க வேண்டிய குண நலன்கள் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும் விரிவாக அலசுகிறது. இதில், குறிப்பாக ஒன்பது விதமான ‘C’க்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள் எழுத்தாளர்கள். இந்தத் தன்மைகள் இருக்கும்பட்சத்தில் ஒருவரால் சிறந்த தலைவராக திகழ முடியும் என்று அடையாளப்படுத்துகின்றார்கள். அது, சிலரிடம் மட்டும்தான் இயற்கையாகவே இருக்கும். தலைவராக விரும்பும் ஒவ்வொருவரும் தாங்களாகவே அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள்.

அந்த ஒன்பது விதமான ‘சி’க்கள் என்ன என்பதுப்பற்றி பார்ப்போம்.

http://img.vikatan.com/news/2015/09/08/images/leaders350.jpg1. CURIOSITY (ஆர்வம்)

2. CREATIVE (
படைப்பாற்றல்)

3. COMMUNICATE (
தொடர்பு)

4. CHARACTER (
குணம்)

5. COURAGE (
தைரியம்)

6. CONVICTION (
உறுதி)

7. CHARISMA (
கவர்ந்திழுக்கும் தன்மை)

8. COMPETENT (
சமாளிக்கும் தன்மை)

9. COMMON SENSE (
பொது அறிவு)

இந்த விஷயங்களையெல்லாம் ஒருவர் தன்னிடம் வளர்த்துக் கொள்ளும் போது, அவரும் ஒரு சிறந்த தலைவராக சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்படுவார். இன்றைய சமூகத்தில் உள்ள இளைஞர்கள்தலைவர்களெல்லாம் இயற்கையாகவே பிறக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தலைவர்கள் பிறக்கப்படுவதில்லை; உருவாக்கப்படுகின்றார்கள்.

தலைவர்களின் பணி வெறும் மேசையில் உட்கார்ந்து கொண்டு உரை நிகழ்த்துவது மட்டுமில்லை, அவர்கள் போர்க்களங்களுக்கும் செல்வார்கள். தங்களுடைய குடும்பத்தை அங்கு அனுப்ப வேண்டிய சூழல் வந்தாலும் அதையும் செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல், தான் மடிந்து விட்டால், அதன்பிறகு வழிநடத்த அடுத்த தலைமையையும் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவர் வெற்றியை நோக்கி வழி நடத்துவார்.

ஆப்ரகாம் லிங்கன் ஒருமுறை கூறும்போது, “நீங்கள் ஒருவரை சோதிக்க வேண்டும் என்றால், அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்து பார்க்க வேண்டும்” என்கின்றார். அதனால், நீங்களும் உங்களை தலைவராக அறிந்து கொள்ள இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

- சலீம்


Sunday, August 23, 2015

வழக்கறிஞராக மாறி எஸ்பிஐ வங்கியிடம் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!-நன்றி விகடன்


http://www.vikatan.com/news/article.php?aid=51390


டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.

ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.

தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
கிருத்திகா மாடசாமி

Wednesday, August 5, 2015

Hanuman Temple That Fulfills Wishes, With guarantee!

What if you get to know there is a temple that guarantees you wish-fulfillment? You may be surprised to know that such a temple does exist. Situated in Gulbarga, Karnataka, there is a Hanuman temple which is famous by the name ‘Koranti Guarantee Temple’.
It is believed that if you visit this temple with utmost faith and pray with all your heart, your prayers will be heard and that’s a guarantee. This temple was built in 1957. It got this name because of the medical college situated nearby. The students from that college used to throng the temple and got their wishes fulfilled. That is how others also came to know about the significance of Koranti temple and it eventually got named as ‘Koranti Guarantee Temple’. According to one of the temple priests, if you visit Koranti temple and chant Hanuman Chalisa for half an hour to one hour, Lord Hanuman pays heed to your prayers and you can see the results soon.
 Kishkindha Parvat
Kishkindha Parvat, considered as Lord Hanuman’s birthplace is also situated in Bellary district, Karnataka. It is said that Lord Hanuman’s mother, Mata Anjani meditated and did tapasya for a son on this mountain range and she was blessed with Hanuman.

Saturday, August 1, 2015

சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு

இதுவும் ஒரு கிரேக்கக் கதையே. வரலாற்றின் சுவாரஸ்யமான தீர்வு காணப்படாத முரண்பாடுகளில் ஒன்று இது.
ப்ரொடகோரஸ் (Protagoras 485-415 B.C) அந்தக் காலத்திய ஒரு சட்ட நிபுணர் சட்ட ஆசிரியரும்கூட. அவரிடம் மாணாக்கனாக ஒரு புத்திசாலி வந்து சேர்ந்தான். அவன் பெயர் யுதலாஸ் (Euthalos). அவனிடம் ஆசிரியருக்கு குரு தட்சினையாகக் கொடுக்கப் பணவசதி இல்லை. அவன் ப்ரொடகோரஸிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒப்பந்தமாவது: யுதலாஸ் வழக்காடி வெற்றி பெறும் முதல் வழக்கின் வழக்குரைஞர் கட்டணத்தை அவன் குரு தட்சினையாகக் கொடுத்து விடவேண்டும்.
வருடங்கள் உருண்டன. யுதலாஸ் தர்க்கமும் சட்டமும் நன்கு கற்றுத் தேர்ந்தான். பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லிக் கொடுத்து நிறைய சம்பாதிக்கவும் செய்தான்.ஆனால் கட்டணம் பற்றி வாயே திறக்கவில்லை. வழக்காடும் வேலையையும் செய்யாமல் நாள் கடத்தி வந்தான்.
ஒரு சமயத்தில் ஆசிரியர் ப்ரொடகோரஸ் பொறுமை இழந்து யுதலாஸ் மீது குருதட்சினைக்காக உள்ளூர்க்கோர்ட் ஒன்றில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய வாதமாவது:
யுதலாஸ் எனக்கு குருதட்சினை கொடுக்கவில்லை. ஆகவே அவரை எனக்கு குரு தட்சிணை வழங்கச் சொல்லி இந்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இந்தவழக்கில் தீர்ப்பு அப்படிப்பட்ட உத்தரவானால் யுதலாஸிடம் இருந்து இந்த நீதிமன்றம் எனக்கு எனது கட்டணத்தை வசூலித்துத் தரவேண்டும். இல்லை இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றால் எங்கள் இருவருக்கிடையில் உள்ள ஒப்பந்தப்படி நீதிமன்றம் இந்த வழக்கின் காஸ்ட் எனக் கருதி அறிவிக்கும் தொகையை எனக்கு அவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
யுதலாஸ் தனது எதிர்வாதத்தில் இவாறு சொன்னார்: நான் அவருக்கு குருதட்சினைக்கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.ஒப்பந்தப்படி நான் முதல் வழக்கில் வெற்றி பெற்றால்தான் அவருக்கு குருதட்சினை செலுத்த வேண்டும். நான் இன்னும் என்னுடைய முதல் வழக்கில் வெற்றிபெறவில்லை. ஆகவே நான் வென்று விட்டால் நீதிமன்றமே சொல்லிவிடும் நான் கட்டணம் செலுத்த வேண்டாமென்று. தோற்று விட்டால் ஒப்பந்தப் படி நான் குருதட்சினை செலுத்த வேண்டியதில்லை.
எப்படி?
விடாகண்டனுக்கேற்ற கொடாக்கண்டன். குருவையே மிஞ்சிய சிஷ்யன்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு. இன்றும் தர்க்க சாஸ்திர வகுப்புகளிலும் சட்ட வகுப்புகளிலும் வவாதிக்கப்டும் பிரசித்தமான Paradox இது

Wednesday, June 24, 2015

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?-நன்றி விகடன் வாசகர் பக்கம்

http://www.vikatan.com/news/article.php?aid=48459

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?
ரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று வரும் ஜூன்-1 முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட்  சட்டம் அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விபத்துக்களை குறைக்காமல், ஹெல்மெட் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி, 'ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் ஆயுள் காக்கும்' என்ற போலீசின் பிரசாரம் இடைத்தேர்தலை விட சூடு பிடித்துள்ளது.

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி செலவழித்து போடப்படும் தரமற்ற சாலையின் அவல நிலையை பார்த்து நீதிமன்றம், அரசிடம் சாலையின் தரத்திற்கான தரச் சான்று கேட்காமல், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் சர்வதேச தரச் சான்றுடன் ரசீதுடன் உள்ளதா என சோதனை செய்யச் சொல்வதைபுரியாத புதிராக உள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

திரும்பிய இடமெல்லாம் ஹெல்மெட் கடைகள். தலைக்கு விலை வைக்கும் தலைக் கவசம், கடைகளில் தலை கீழாகத் கட்டித் தொங்க விடப்பட்டு, உயிரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஊழலில் ஊறிப்போன உயிரற்ற சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் காக்க சட்டம் போட்ட நீதிமன்றம், சாலையின் உயிருக்கு எந்த உத்தரவாதமும், கேள்வியும் கேட்காத நிலையில், சாலையை முழுவதுமாக தரமாக போடாமல் (கமிஷன் பிரச்னையோ? ) சாலைக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை அரசு துரிதமாக நடத்தி வருகிறது.

வண்டி ஓட்டுனர்  பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம் கண் முன்னாலிருக்கும் சாலையை தரமாக போடச் சொல்ல மறந்து விட்டதே?
 
மோட்டார்  வாகனச் சட்டம், நீதிமன்றம், போலீசாரால் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது  என்பதே  புரியாத நிலையில், விபத்தை கொடுக்கும் வாகன நெரிசல் பற்றியும், விடை தெரியாத இதர  சட்டம் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன...
1. காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட்  அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. முன்னணித் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் கூட சீட் பெல்ட் அணியாமல்தான் வாகனத்தில் வருகின்றனர். சட்டம் பேச முடியுமா?

போலீஸ் உயர் அதிகாரிகள் முன் இருக்கையில் அமர்ந்து செல்கையில் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? போக்குவரத்து போலீசார் சீட் பெல்ட் அணிந்து  வந்ததாக செய்தி உண்டா? வட்டாரப் போக்குவரத்து ஆய் வாளர் ஓட்டுனர், சீட் பெல்ட்  அணிந்து  வருகிறார்களா? சட்ட மேதைகளின் ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட்   அணிகின்றனரா?

2.
சக  பயணிகளை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்க  மோ.வா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திண்டுக் கல்லில் போலீஸ் உடையில் இருந்த எஸ் .ஐ.பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு என்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது??  .

3.
சட்டப்படி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் செல்வது தவறு தான்....அதற்காக  சென்னை கே.கே நகரில்  இரு சக்கர வாகனத்தில் சென்றவரின்  சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை கொன்றதை சட்டம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது நியாயமா?

4.
விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக ,மோசமாக பொறுப்பற்ற வகையில்  வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க சட்டமுள்ளது. சென்னையில் இருந்து 464 கிமீ தூரமுள்ள மதுரைக்குஇரவு 10 மணிக்கு கிளம்பும்  வண்டி, 5 மணி நேரம் 30  நிமிடத்தில்சராசரியாக 85 கிமீ  வேகத்தில்   மதுரைக்கு வரும் பட்சத்தில் அது வாகன சட்ட வேக வரைமுறைக்கு உட்பட்டதா?

இந்திய மோ.வா.  சட்டப்படி கனரக பயணிகள் போக்குவரத்து  வாகனம்மணிக்கு 65 கிமீக்கு மேல் செல்ல தடையும், அபராதமும் விதிக்க சட்டம் உள்ளது. தோராயமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில்  ஓடும்  வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளார்களா?
5. படிக்கட்டில் நின்றபடி, தொங்கியபடி  பயணம் செய்ய அனுமதித்தால் ரூ.100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. சென்னையில் அரசுப்பேருந்துகளில் படிக்கட்டில் தொங்காத மாணவர்களைப் பார்ப்பதே அரிது. எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

6.
குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ. 2000 அபராதம், 6 மாதம் சிறை  விதிக்க சட்டம் சொல்கிறது. சமீபத்தில் போதையுடன் பயணிகளிடம் பிடிபட்ட  தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனருக்கு சட்டம் என்ன தண்டனை அளித்துள்ளது? அப்பாவிகள் உயிரை எமனிடம் சேர்க்க முற்பட்ட குடிபோதை ஓட்டுனர் மீது  சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனரா?

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6821. அங்கு வரும் வண்டிகளின் எண்ணிக்கையோ பல ஆயிரம். நாளொன்றுக்கு ஒரு கடைக்கு  வரும் போதை ஆசாமி ஒருவர் வீதம் 6821 வண்டிகள் மீது வழக்குப்போட முடியுமா? தமிழ்நாட்டின் அவலமே இதுதான். குடிக்காதவர்  ஹெல்மெட் மறந்து வைத்து விட்டு போனால் அபராதம்... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் கூட  அபராதம் போட  போலீசுக்கு  அதிகாரமில்லை. நீதிமன்றமே நேரடியாக டாஸ்மாக் கடை முன் வண்டிகளை நிறுத்த தடை விதிக்கலாமே?

7.
மோசமான டயர் கொண்ட வண்டிக்கு ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் சொல்கிறது. அரசுப்பேருந்துகளின் டயர் நிலைக்கு எவ்வளவு அபராதம் போடப்பட்டுள்ளது?

8. அதிவேகத்துடன் ஓட்டப்படும் வண்டிக்கு, அபராதம் ரூ. 1000 விதிக்க சட்டமுள்ளது. மோ.வா. ச  112 இன் படி ஒவ்வொரு வாகனத்திற்கும் வேகம் குறிப்பிடப்பட்டு இருக்கும்போது அதிவேகமாக செல்லும் வகையில், வாகனம் தயாரிக்க நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. உதாரணமாக  இரு சக்கர வண்டி 65 கி.மீ.க்குள்தான் செல்லவேண்டும் என்றால் 120 கி.மீ.க்கு ஓட்டும் அளவிற்கு வண்டி வடிவமைப்பை அனுமதிப்பதேன்?

9.
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், கருப்பு நிற ஸ்டிக்கர் நீக்காமல் ஓடும் பணக்கார கார்களை போலீசாரால் நிறுத்தி அபராதம் விதிக்க முடியுமா? இரு சக்கர வாகனச் சாவியை பிடுங்குவது போல காரை நெருங்கி பார்க்கும் தைரியம் உள்ளதா?

10.
பக்க கண்ணாடிசைகை  விளக்குஒலிப்பான் (ஹாரன்) இல்லாமை, அதி வேகத்துடன் முந்திச் செல்வது (over taking ) போன்றவற்றிற்கும் மோ.வா சட்டம் ரூ.100 அபராதம் விதிக்கச் சொல்கிறது. இன்றைக்குள்ள பெரும்பாலான ஆட்டோக்களில்  பக்க கண்ணாடி இருக்காது. இடதுகைப்  புறமாக முந்திச் செல்வதில் ஆட்டோக்கள் முதலிடம் பிடிக்கின்றன.  இதுவரை எத்தனை வாகனங்கள்  மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்?

11.
அனைத்து அரசு, தனியார் வாகனத்தின் ஹெட் லைட்டுகள் (முகப்பு விளக்குகள்)  கண்கள் கூசும் அளவிற்கு உள்ளது. கண்கள் கூசும் அளவிற்கு  ஹெட் லைட்டுகள், ஒரு வண்டிக்கு 10 விளக்குகள், பகலில் கூட விளக்கு வெளிச்சம் போட்டு கண்கள் கூசச் செவதற்கு இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. இதுவரை எத்தனை வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளார்கள்?

12.
இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம்காரில் பின் இருக்கையில் அமர்பவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் எனச் சொல்லாதது ஏன்?

13.
நிறுத்தக்கூடாத இடத்தில்ஆட்களை ஏற்றி அனைத்து வாகனத்திற்கும் இடையூறு செய்யும் மினி பஸ், ஆடோக்கள் மீது சட்டப்படி எவ்வளவு அபராதம் இது வரை விதிக்கப்பட்டுள்ளது? போக்குவரத்திற்கு இம்சை செய்யும் கார்கள், அரசியல் கட்சிக் கொடியுடன் நிறுத்தப்படும் வண்டிகளுக்கு போலீசாரால் அபராதம் விதிக்க முடியுமா? அப்பளம் போல நொறுங்கிப்போகும் நான்கு சக்கர வண்டிகளின் விபத்தின் விகிதம் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
14. சென்னையில் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் வாரம் ஒருநாள் சென்னையின் முக்கிய இடங்களில் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவது போக்குவரத்துப் போலீசாருக்கு தெரியுமா...சமீபத்தில் சென்னையில் அப்பாவி உயிர்கள் பலியான சம்பவங்கள் அதன் விளைவுதான் என தெரிந்தும், அதற்கான உரிய சட்டப்பிரிவுகளில்தான் காவல்துறை வழக்குப்பதிந்ததா? காலம் காலமாக நடந்துவரும் இந்த பந்தயத்தினால் முக்கிய சாலைகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சுகின்றனரே அது காவல்துறைக்கு தெரியுமா?

சட்டப்படிதான் நடக்க வேண்டும் எனச்  சொல்லும் காவல் துறை மீது லஞ்சப்புகாரும், பாலியல் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. சட்டப்படி யார் நடவடிக்கை எடுக்க முடியும்? ஏற்கனவே லஞ்சப்புகாரில்  முதலிடம் வகிக்கும் போலீசார்ஹெல்மெட் மூலம் தொடர்ந்து முதலிடம் பெறுவார்கள் என்ற (அவ) நம்பிக்கையை தகர்க்க லஞ்ச ஒழிப்பு போலீசார், " சட்டப்படி" நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள்  நம்புகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில் உடன்பாடுதான். ஆனால் ஹெல்மெட் மட்டுமே முக்கியம் எனக் கருதாமல் இதர போக்குவரத்து சட்ட விதிமுறைகளை போலீசார் முறையாக அமல்படுத்தினால் விபத்திற்கு விடுதலை கட்டாயம் உண்டு.

- எஸ். அசோக்