இதுவும் ஒரு கிரேக்கக் கதையே. வரலாற்றின் சுவாரஸ்யமான தீர்வு காணப்படாத முரண்பாடுகளில் ஒன்று இது.
ப்ரொடகோரஸ் (Protagoras 485-415 B.C) அந்தக் காலத்திய ஒரு சட்ட நிபுணர் சட்ட ஆசிரியரும்கூட. அவரிடம் மாணாக்கனாக ஒரு புத்திசாலி வந்து சேர்ந்தான். அவன் பெயர் யுதலாஸ் (Euthalos). அவனிடம் ஆசிரியருக்கு குரு தட்சினையாகக் கொடுக்கப் பணவசதி இல்லை. அவன் ப்ரொடகோரஸிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒப்பந்தமாவது: யுதலாஸ் வழக்காடி வெற்றி பெறும் முதல் வழக்கின் வழக்குரைஞர் கட்டணத்தை அவன் குரு தட்சினையாகக் கொடுத்து விடவேண்டும்.
வருடங்கள் உருண்டன. யுதலாஸ் தர்க்கமும் சட்டமும் நன்கு கற்றுத் தேர்ந்தான். பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லிக் கொடுத்து நிறைய சம்பாதிக்கவும் செய்தான்.ஆனால் கட்டணம் பற்றி வாயே திறக்கவில்லை. வழக்காடும் வேலையையும் செய்யாமல் நாள் கடத்தி வந்தான்.
ஒரு சமயத்தில் ஆசிரியர் ப்ரொடகோரஸ் பொறுமை இழந்து யுதலாஸ் மீது குருதட்சினைக்காக உள்ளூர்க்கோர்ட் ஒன்றில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய வாதமாவது:
யுதலாஸ் எனக்கு குருதட்சினை கொடுக்கவில்லை. ஆகவே அவரை எனக்கு குரு தட்சிணை வழங்கச் சொல்லி இந்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இந்தவழக்கில் தீர்ப்பு அப்படிப்பட்ட உத்தரவானால் யுதலாஸிடம் இருந்து இந்த நீதிமன்றம் எனக்கு எனது கட்டணத்தை வசூலித்துத் தரவேண்டும். இல்லை இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றால் எங்கள் இருவருக்கிடையில் உள்ள ஒப்பந்தப்படி நீதிமன்றம் இந்த வழக்கின் காஸ்ட் எனக் கருதி அறிவிக்கும் தொகையை எனக்கு அவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
யுதலாஸ் தனது எதிர்வாதத்தில் இவாறு சொன்னார்: நான் அவருக்கு குருதட்சினைக்கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.ஒப்பந்தப்படி நான் முதல் வழக்கில் வெற்றி பெற்றால்தான் அவருக்கு குருதட்சினை செலுத்த வேண்டும். நான் இன்னும் என்னுடைய முதல் வழக்கில் வெற்றிபெறவில்லை. ஆகவே நான் வென்று விட்டால் நீதிமன்றமே சொல்லிவிடும் நான் கட்டணம் செலுத்த வேண்டாமென்று. தோற்று விட்டால் ஒப்பந்தப் படி நான் குருதட்சினை செலுத்த வேண்டியதில்லை.
எப்படி?
விடாகண்டனுக்கேற்ற கொடாக்கண்டன். குருவையே மிஞ்சிய சிஷ்யன்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு. இன்றும் தர்க்க சாஸ்திர வகுப்புகளிலும் சட்ட வகுப்புகளிலும் வவாதிக்கப்டும் பிரசித்தமான Paradox இது
ப்ரொடகோரஸ் (Protagoras 485-415 B.C) அந்தக் காலத்திய ஒரு சட்ட நிபுணர் சட்ட ஆசிரியரும்கூட. அவரிடம் மாணாக்கனாக ஒரு புத்திசாலி வந்து சேர்ந்தான். அவன் பெயர் யுதலாஸ் (Euthalos). அவனிடம் ஆசிரியருக்கு குரு தட்சினையாகக் கொடுக்கப் பணவசதி இல்லை. அவன் ப்ரொடகோரஸிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒப்பந்தமாவது: யுதலாஸ் வழக்காடி வெற்றி பெறும் முதல் வழக்கின் வழக்குரைஞர் கட்டணத்தை அவன் குரு தட்சினையாகக் கொடுத்து விடவேண்டும்.
வருடங்கள் உருண்டன. யுதலாஸ் தர்க்கமும் சட்டமும் நன்கு கற்றுத் தேர்ந்தான். பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லிக் கொடுத்து நிறைய சம்பாதிக்கவும் செய்தான்.ஆனால் கட்டணம் பற்றி வாயே திறக்கவில்லை. வழக்காடும் வேலையையும் செய்யாமல் நாள் கடத்தி வந்தான்.
ஒரு சமயத்தில் ஆசிரியர் ப்ரொடகோரஸ் பொறுமை இழந்து யுதலாஸ் மீது குருதட்சினைக்காக உள்ளூர்க்கோர்ட் ஒன்றில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய வாதமாவது:
யுதலாஸ் எனக்கு குருதட்சினை கொடுக்கவில்லை. ஆகவே அவரை எனக்கு குரு தட்சிணை வழங்கச் சொல்லி இந்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இந்தவழக்கில் தீர்ப்பு அப்படிப்பட்ட உத்தரவானால் யுதலாஸிடம் இருந்து இந்த நீதிமன்றம் எனக்கு எனது கட்டணத்தை வசூலித்துத் தரவேண்டும். இல்லை இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றால் எங்கள் இருவருக்கிடையில் உள்ள ஒப்பந்தப்படி நீதிமன்றம் இந்த வழக்கின் காஸ்ட் எனக் கருதி அறிவிக்கும் தொகையை எனக்கு அவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
யுதலாஸ் தனது எதிர்வாதத்தில் இவாறு சொன்னார்: நான் அவருக்கு குருதட்சினைக்கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.ஒப்பந்தப்படி நான் முதல் வழக்கில் வெற்றி பெற்றால்தான் அவருக்கு குருதட்சினை செலுத்த வேண்டும். நான் இன்னும் என்னுடைய முதல் வழக்கில் வெற்றிபெறவில்லை. ஆகவே நான் வென்று விட்டால் நீதிமன்றமே சொல்லிவிடும் நான் கட்டணம் செலுத்த வேண்டாமென்று. தோற்று விட்டால் ஒப்பந்தப் படி நான் குருதட்சினை செலுத்த வேண்டியதில்லை.
எப்படி?
விடாகண்டனுக்கேற்ற கொடாக்கண்டன். குருவையே மிஞ்சிய சிஷ்யன்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு. இன்றும் தர்க்க சாஸ்திர வகுப்புகளிலும் சட்ட வகுப்புகளிலும் வவாதிக்கப்டும் பிரசித்தமான Paradox இது
No comments:
Post a Comment