Thursday, May 3, 2018

அன்பும் அறமும் பற்றி வள்ளுவன்


திருக்குறள் 77

8 அன்புடைமை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

அன்பில்லாதவன், நியாயமாக செயல்பட முடியாது. எனவே, வெயிலில் புழு துடிப்பது போல், அன்பில்லாதவனை அறம் படுத்தும்.
Above is from Rangataj pandey in his post

Thanks to FB pkt Sami in pandey,s post.
வள்ளுவர் சொன்ன இந்தக் குறளைக் கேட்ட
ஒரு இளைஞன் வள்ளுவனிடம் போய் அய்யா
அன்போடு அறம் செய்ய விரும்புகிறேன் ஆனால் அதற்கான வழிதான் தெரிய வில்லை எப்படி    அன்புடன்  அறம் செய்வது
என்று கேட்டான்
           உடனே வள்ளுவ௫ம் தயங்காமல்
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்  இன்னான்கும்
இழுக்கா இயன்றதறம் "அதாவது மனதில்
அழுக்கில்லாமல் பேராசைப் படாமல் கோபம் கொள்ளாமல் கடுஞ் சொற்களைப் பேசாதி௫ப்பதே அன்போடு கூடிய அறம் என்றாா்
             இளைஞனும் வள்ளுவ௫க்கு நன்றி தொிவித்து விட்டு சென்றான் இவற்றைக் கடைப்பிடிக்க முயற்சித்தான்
முடியவில்லை மீண்டும் வள்ளுவனிடம் வந்து
வள்ளுவரே நீங்கள் அன்புடன் கூடிய அறத்தைக் கடைப்பிடிக்க சொன்ன வழி மிகவும் கடுமையாக இ௫க்கிறது எனவே
எளிமையான வழி ஒரே வழி இ௫ந்தால்
சொல்லுங்கள் அதுவும் எளிமையான வழியாக இ௫க்கவேண்டு  மென்று கேட்டான்
                 வள்ளுவ௫ம் சளைக்காமல் அப்படியா சாி எனச் சொல்லி
"மனத்துக்கண் மாசிலன்ஆதல்அனைத்தறன்
ஆகுல நீர பிற"
என்று சொன்னா் இளைஞன் சந்தோஷமாகச் சென்று கடைப் பிடிக்க முயற்சித்தான் முடியவில்லை மிகுந்த கோபத்தோடு வள்ளுவாிடம் வந்தான் வள்ளுவரே நீங்கள்
பொிய குசும்புக்காரராக இ௫க்கிறீா்களே
நான் ஒரேவழி எளிமையான வழியாகக் கேட்டால் நீங்கள் மீண்டும் மிகக் கடுமையான
வழியையே சொல்லியி௫க்கிறீா்கள் எளிமையான வழி ஒரே வழி சொல்லுங்கள்
என்றான்
          வள்ளுவ௫ம் சிாித்தபடி தி௫மணம்
செய்து கொள்அதுதான் அன்பான அறமென்றாா்  ஆம்
"அறன்எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று"
என்று சொல்லி விட்டு இளைஞனே நில்
மீண்டும் என்னிடம் வந்து நிற்காதே கேள்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"
போய்வா என்றாா் இளைஞனும் மகிழ்வாகச்
சென்றான்

No comments:

Post a Comment