Thursday, May 3, 2018

அன்பும் அறமும் பற்றி வள்ளுவன்


திருக்குறள் 77

8 அன்புடைமை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

அன்பில்லாதவன், நியாயமாக செயல்பட முடியாது. எனவே, வெயிலில் புழு துடிப்பது போல், அன்பில்லாதவனை அறம் படுத்தும்.
Above is from Rangataj pandey in his post

Thanks to FB pkt Sami in pandey,s post.
வள்ளுவர் சொன்ன இந்தக் குறளைக் கேட்ட
ஒரு இளைஞன் வள்ளுவனிடம் போய் அய்யா
அன்போடு அறம் செய்ய விரும்புகிறேன் ஆனால் அதற்கான வழிதான் தெரிய வில்லை எப்படி    அன்புடன்  அறம் செய்வது
என்று கேட்டான்
           உடனே வள்ளுவ௫ம் தயங்காமல்
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்  இன்னான்கும்
இழுக்கா இயன்றதறம் "அதாவது மனதில்
அழுக்கில்லாமல் பேராசைப் படாமல் கோபம் கொள்ளாமல் கடுஞ் சொற்களைப் பேசாதி௫ப்பதே அன்போடு கூடிய அறம் என்றாா்
             இளைஞனும் வள்ளுவ௫க்கு நன்றி தொிவித்து விட்டு சென்றான் இவற்றைக் கடைப்பிடிக்க முயற்சித்தான்
முடியவில்லை மீண்டும் வள்ளுவனிடம் வந்து
வள்ளுவரே நீங்கள் அன்புடன் கூடிய அறத்தைக் கடைப்பிடிக்க சொன்ன வழி மிகவும் கடுமையாக இ௫க்கிறது எனவே
எளிமையான வழி ஒரே வழி இ௫ந்தால்
சொல்லுங்கள் அதுவும் எளிமையான வழியாக இ௫க்கவேண்டு  மென்று கேட்டான்
                 வள்ளுவ௫ம் சளைக்காமல் அப்படியா சாி எனச் சொல்லி
"மனத்துக்கண் மாசிலன்ஆதல்அனைத்தறன்
ஆகுல நீர பிற"
என்று சொன்னா் இளைஞன் சந்தோஷமாகச் சென்று கடைப் பிடிக்க முயற்சித்தான் முடியவில்லை மிகுந்த கோபத்தோடு வள்ளுவாிடம் வந்தான் வள்ளுவரே நீங்கள்
பொிய குசும்புக்காரராக இ௫க்கிறீா்களே
நான் ஒரேவழி எளிமையான வழியாகக் கேட்டால் நீங்கள் மீண்டும் மிகக் கடுமையான
வழியையே சொல்லியி௫க்கிறீா்கள் எளிமையான வழி ஒரே வழி சொல்லுங்கள்
என்றான்
          வள்ளுவ௫ம் சிாித்தபடி தி௫மணம்
செய்து கொள்அதுதான் அன்பான அறமென்றாா்  ஆம்
"அறன்எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று"
என்று சொல்லி விட்டு இளைஞனே நில்
மீண்டும் என்னிடம் வந்து நிற்காதே கேள்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"
போய்வா என்றாா் இளைஞனும் மகிழ்வாகச்
சென்றான்

இறை நம்பிக்கையும் முயற்சியும்

Thanks to what's up by GSC
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று

"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,

"இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,

எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.

ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது

''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'

இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய்,
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.

"கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்

ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை.
*முயற்சி திருவினையாக்கும்

Wednesday, May 2, 2018

மல்லாரிகளின் கம்பீரம்


Thanks to THE HINDU 
http://tamil.thehindu.com/general/art/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article5204119.ece
இன்று மேடைகளில் அரங்கேறும் எல்லா செவ்வியல் இசை வடிவங்களின் தொடக்கமும் கோயில்களே. நிலவுடைமை உடைந்து, கோயில்களின் முக்கியத்துவம் சமூகத்தில் குறைந்தபோது பல இசை வடிவங்களும் கோயில்களை விட்டு வெளியேறின. சென்னை நகரில் தோன்றிய இசையரங்குகள் இக்கலைகளின் பாதுகாவலனாகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. இசைக் கலைஞர்களும் நகரங்களில் குடியேறினர்.
ஆனால் நாகசுரம்-தவில் ஆகிய இரண்டு வாத்தியங்களும் தொடர்ந்து கோயில்களிலேயே ஒலித்தன. பரம்பரையாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை வைத்துக்கொண்டு அக்கலைஞர்கள் தத்தம் ஊரிலேயே தங்கிவிட்டனர். அதிகபட்சமாக ஊருக்கு அருகில் உள்ள நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை எனப் பல கலைஞர்கள் தங்கள் ஊரிலேயே இருந்தனர். திருவாவடுதுறை ஆதினத்துடன் பிணக்கு வரும்வரை இராஜரத்தினம் பிள்ளையும் திருவாவடுதுறையில்தான் தங்கியிருந்தார். தவில் கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படி ஊரிலேயே தங்கிவிட்ட கலைஞர்தான் ஆச்சாள்புரம் ச. சின்னத்தம்பியா பிள்ளை. தில்லை நடராஜர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாசிக்கப்படும் நாகசுர இசை மரபை முழுவதும் அறிந்தவர் இவர் ஒருவரே. பல்லவி வாசிப்பதில் ஈடு இணையற்றவரான இராதாகிருஷ்ண பிள்ளையின் மாணாக்கரான சின்னத்தம்பியா பிள்ளை, அவருடன் சேர்ந்து வாசித்து சிதம்பரம் கோயிலில் இசைப் பணி ஆற்றிவந்தார். இன்று 88 வயது நிறைவடைந்திருக்கும் அவரைக் கொண்டு, சிதம்பரம் கோயிலில் வாசிக்கப்படும் நாகசுர இசை மரபைப் படமாக்கியிருக்கிறார் இசையறிஞர் பி.எம். சுந்தரம். நாதமும் நாதனும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் நாகசுரம் - தவில் குறித்த முழுமையான தகவல்களைத் தருவது மட்டுமின்றி, திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் சிதம்பரம் ஆலயத்தில் வாசிக்கப்படும் பல்வேறு மல்லாரிகளையும் இராகங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறது. 88 வயதிலும் சற்றும் பிசிறடிக்காமல் மல்லாரிகளையும் இராகங்களையும் வாசித்து பிரமிக்க வைக்கிறார் சின்னத்தம்பியா பிள்ளை.
"வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். பெரும்பாலான கோயில்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இசைமரபுகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. விதிவிலக்காக சிதம்பரம் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலிலும் மட்டுமே இந்த மரபுகள் தொடர்ந்து பேணப்படுகின்றன,” என்றார் சுந்தரம்.
பண்டைக் காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள் தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது. ருத்ர பூமியான சுடுகாட்டில் எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலுக்குப் பூசை செய்து தவில் வாசிப்பவரிடம் வேதியர் அளிப்பார். இன்று வழக்கொழிந்துபோன இம்முறையை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
"தவில் பக்க வாத்தியம். இருப்பினும் நாகசுர மரபில் கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாகத் தவில்தான் ஒலிக்கும். மற்ற இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்கள் முதலில் வாசிக்க அனுமதிக்கப்படுவில்லை. தவிலின் முக்கியத்துவத்தை இந்த வழக்கம் தெளிவாக்குகிறது,” என்று விளக்கினார் சுந்தரம்.
பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும்போது வாசிக்கப்படும் தீர்த்த மல்லாரி ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து மடப்பள்ளியில் இருந்து சுவாமிக்குப் படைப்பதற்கு தளிகை எடுத்து வருகையில் தளிகை மல்லாரி ஒலிக்கிறது. தேரோட்டம் அன்று தேர் மல்லாரி.
மல்லாரிகளின் பல வகைகள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. மல்லாரி என்பது வெறும் சொற்கட்டுகளே. நாகசுர வித்வானின் கற்பனைக்கு தகுந்தாற்போல் அதன் மெருகு ஏறும். வீரச்சுவை நிரம்பிய கம்பீர நாட்டை இராகத்திலேயே மல்லாரி வாசிப்பது மரபு. "குந்த குந்த” என்று தவில் முழங்க மல்லாரி ஒலிக்கத் தொடங்கியதும் ஊர் மக்களுக்கு சுவாமி புறப்பாடு தொடங்கியது தெரிந்துவிடும்.
"சிதம்பரம் ஆலயத்தில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பட்டதும் மல்லாரி வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இராகம் விரிவாக வாசிக்கப்படு இராகம்-தானம்-பல்லவி தொடரும்,” என்று சுந்தரம் கூறினார்.
முதல் நாள் சங்கராபரணம், இரண்டாம் நாள் ரீதிகௌளை, மூன்றாம் நாள் சக்கரவாகம், நான்காம் நாள் ஹம்சபிரமரி, ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி, ஆறாம் நாள் சண்முகப்பிரியா, எழாம் நாள் காம்போதி.
எட்டாம் நாள் வாசிக்கப்படும் ஒடக்கூறு சிறப்பு வாய்ந்தது. உடற்கூறு என்பது சிதைந்து ஒடக்கூறு என்றாகிவிட்டது. தன் மேல் மோகம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற உடம்பின் இரகசியத்தை சிவபெருமான் விவரித்ததை இந்த உடற்கூறு வெளிப்படுத்தும். பெரும்பாலும் நாதநாமக்கிரியா இராகத்திலேயே ஒடக்கூறு வாசிப்பார்கள்.
ஒன்பதாம் நாளன்று தேர் மல்லாரி. பத்தாம் நாளில் தில்லைக்கூத்தன் மேல் முத்துத்தாண்டவர் இயற்றிய கீர்த்தனைகள் வாசிக்கப்படும். பதினொன்றாம் நாள் உசேனி இராகம் மட்டுமே.
"ஒவ்வொரு நாளும் சுவாமி வலம் வந்து முடித்ததும் கோயில் பிரகாரத்தில் வைத்து தேவதாசிகள் தட்டு சுற்றி, திருஷ்டி கழிப்பார்கள். அந்தப் பழக்கம் முடிவுக்கு வந்ததும், தவில்காரர்கள் மூன்று சுற்றுகள் வாத்தியத்தைத் தட்டிக் கொண்டே சுற்றுவார்கள். இன்று அந்த முறையும் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை,” என்றார் சுந்தரம்.
மாபெரும் இசைமரபுகள் இடம் தெரியாமல் போய்க்கொண்டிக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்க்கும் இசை ஆர்வலர் உணர்வார். திருவாருர் கோயிலில் பாரி நாகசுரம் வாசிக்கும் செல்வகணபதியும் இன்று எண்பதுகளைத் தாண்டிவிட்டார். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்கருவியால் இயங்கும் வாத்தியங்கள் முழங்குகின்றன. கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளம் பல கோயில் விழாக்களை ஆக்கிரமித்துக்கொண்டது. செண்டை மேளத்துக்கான நடை எதையும் அறியாதவர்கள் நையாண்டி மேளம் போல் வாசிக்கிறார்கள். பொருத்தமாக சிங்காரி மேளம் என்று பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது.