நாடோடி தென்றல் என்ற ஒரு படம் (கார்த்திக் உடன் ரஞ்சிதா நடித்தது)
படம் : நாடோடி தென்றல்
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ
இந்த படத்தில் வரும் மேற்சொன்ன பாடல் மணியே மணிக்குயிலே. மிக அற்புதமான இசையமைப்புடன் வந்த பாடல். எங்கு ஒலித்தாலும் நின்று கேட்க தோன்றும். அதில் ஒரு வரி
கண்ணிமையில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
இந்த வரிகள் என்னுடைய மனதில் ரீங்கரித்துகொண்டே இருந்தது. நாம் தான் தப்பாக கேட்டுவிட்டோமோ. ஏந்திழை என்றொரு வார்த்தை இருக்குமா என்று ஒரு தயக்கம்.
இருந்தாலும் பார்ப்போமே என்று கொஞ்சம் இணையத்தில் துழாவினேன். ஆச்சரியம். இது ஒரு அற்புதமான சொல்லாடல். அபூர்வமான இலக்கிய சொல் என்று தெரிந்துகொண்டேன்.
பாமரன் எழுதும் பாடல் என்று சொல்லி ஒரு பா-அமரன் (பாட்டுக்கே தேவன்) என்று சொல்லவைக்கும் அளவுக்கு சொல் தேர்ந்திடுத்திருக்கிறார் இளையராஜா.
சரிதான் ஏந்திழை என்ற சொல்லுக்கு என்ன பொருள். அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்பதுவாகும். கதாநாயகன் ஒரு தங்க ஆபரணம் செய்யும் தட்டனாக இருந்ததால் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் போலும். .
சரி இந்த சொல்லாடல் இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று பார்ப்போம்.
பிற்சேர்க்கை 23-அக்டோபர்-2019
தேன்கிண்ணம் மற்றும் டீப்லிரிக்ஸ் என்கிற வலைப்பூக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த பிற்சேர்க்கை இடுகையை பதிவிடுகிறேன்
http://thenkinnam.blogspot.com/2008/05/446.html#comment-8281358860975972799
https://deeplyrics.in/song/naan-erikkarai-melirunthu
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
என்கிற பாடல் கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் இந்த ஏந்திழை என்கிற சொற்பதம் கிடைத்தது.
படம் : சின்னதாயீ
நடிப்பு : விக்னேஷ் உடன் பத்மஸ்ரீ
வருடம் : 1992
பாடியவர் : K j யேசுதாஸ், ஸ்வர்ணலதா
எழுதியவர் : வாலி
இசை : இளையராஜா
ஒரு ஒற்றுமை .. நாடோடி தென்றல் திரைப்படமும் 1992 ல் வெளிவந்த படமே ... எனவே வாலியிடமிருந்து இளையராஜாவுக்கு இந்த சொல்லில் ஒரு ஈர்ப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். அதே சமயம் வாலி அவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் அத்துப்படி எனவே அவர்தான் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தினார் என நான் நம்புகிறேன்
இந்த பதிவு நானே சொந்தமாக எழுதியது - ரமணன்
படம் : நாடோடி தென்றல்
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ
இந்த படத்தில் வரும் மேற்சொன்ன பாடல் மணியே மணிக்குயிலே. மிக அற்புதமான இசையமைப்புடன் வந்த பாடல். எங்கு ஒலித்தாலும் நின்று கேட்க தோன்றும். அதில் ஒரு வரி
கண்ணிமையில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
இந்த வரிகள் என்னுடைய மனதில் ரீங்கரித்துகொண்டே இருந்தது. நாம் தான் தப்பாக கேட்டுவிட்டோமோ. ஏந்திழை என்றொரு வார்த்தை இருக்குமா என்று ஒரு தயக்கம்.
இருந்தாலும் பார்ப்போமே என்று கொஞ்சம் இணையத்தில் துழாவினேன். ஆச்சரியம். இது ஒரு அற்புதமான சொல்லாடல். அபூர்வமான இலக்கிய சொல் என்று தெரிந்துகொண்டேன்.
பாமரன் எழுதும் பாடல் என்று சொல்லி ஒரு பா-அமரன் (பாட்டுக்கே தேவன்) என்று சொல்லவைக்கும் அளவுக்கு சொல் தேர்ந்திடுத்திருக்கிறார் இளையராஜா.
சரிதான் ஏந்திழை என்ற சொல்லுக்கு என்ன பொருள். அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்பதுவாகும். கதாநாயகன் ஒரு தங்க ஆபரணம் செய்யும் தட்டனாக இருந்ததால் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் போலும். .
சரி இந்த சொல்லாடல் இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று பார்ப்போம்.
பெரிய திருமொழி - நாலாயிர திவ்ய பிரபந்தம்
(1110)
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
நன்றி : http://dravidaveda.org/பிற்சேர்க்கை 23-அக்டோபர்-2019
தேன்கிண்ணம் மற்றும் டீப்லிரிக்ஸ் என்கிற வலைப்பூக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த பிற்சேர்க்கை இடுகையை பதிவிடுகிறேன்
http://thenkinnam.blogspot.com/2008/05/446.html#comment-8281358860975972799
https://deeplyrics.in/song/naan-erikkarai-melirunthu
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
என்கிற பாடல் கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் இந்த ஏந்திழை என்கிற சொற்பதம் கிடைத்தது.
படம் : சின்னதாயீ
நடிப்பு : விக்னேஷ் உடன் பத்மஸ்ரீ
வருடம் : 1992
பாடியவர் : K j யேசுதாஸ், ஸ்வர்ணலதா
எழுதியவர் : வாலி
இசை : இளையராஜா
ஒரு ஒற்றுமை .. நாடோடி தென்றல் திரைப்படமும் 1992 ல் வெளிவந்த படமே ... எனவே வாலியிடமிருந்து இளையராஜாவுக்கு இந்த சொல்லில் ஒரு ஈர்ப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். அதே சமயம் வாலி அவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் அத்துப்படி எனவே அவர்தான் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தினார் என நான் நம்புகிறேன்
இந்த பதிவு நானே சொந்தமாக எழுதியது - ரமணன்
No comments:
Post a Comment