Sunday, August 23, 2015

வழக்கறிஞராக மாறி எஸ்பிஐ வங்கியிடம் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!-நன்றி விகடன்


http://www.vikatan.com/news/article.php?aid=51390


டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.

ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.

தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
கிருத்திகா மாடசாமி

Wednesday, August 5, 2015

Hanuman Temple That Fulfills Wishes, With guarantee!

What if you get to know there is a temple that guarantees you wish-fulfillment? You may be surprised to know that such a temple does exist. Situated in Gulbarga, Karnataka, there is a Hanuman temple which is famous by the name ‘Koranti Guarantee Temple’.
It is believed that if you visit this temple with utmost faith and pray with all your heart, your prayers will be heard and that’s a guarantee. This temple was built in 1957. It got this name because of the medical college situated nearby. The students from that college used to throng the temple and got their wishes fulfilled. That is how others also came to know about the significance of Koranti temple and it eventually got named as ‘Koranti Guarantee Temple’. According to one of the temple priests, if you visit Koranti temple and chant Hanuman Chalisa for half an hour to one hour, Lord Hanuman pays heed to your prayers and you can see the results soon.
 Kishkindha Parvat
Kishkindha Parvat, considered as Lord Hanuman’s birthplace is also situated in Bellary district, Karnataka. It is said that Lord Hanuman’s mother, Mata Anjani meditated and did tapasya for a son on this mountain range and she was blessed with Hanuman.

Saturday, August 1, 2015

சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு

இதுவும் ஒரு கிரேக்கக் கதையே. வரலாற்றின் சுவாரஸ்யமான தீர்வு காணப்படாத முரண்பாடுகளில் ஒன்று இது.
ப்ரொடகோரஸ் (Protagoras 485-415 B.C) அந்தக் காலத்திய ஒரு சட்ட நிபுணர் சட்ட ஆசிரியரும்கூட. அவரிடம் மாணாக்கனாக ஒரு புத்திசாலி வந்து சேர்ந்தான். அவன் பெயர் யுதலாஸ் (Euthalos). அவனிடம் ஆசிரியருக்கு குரு தட்சினையாகக் கொடுக்கப் பணவசதி இல்லை. அவன் ப்ரொடகோரஸிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒப்பந்தமாவது: யுதலாஸ் வழக்காடி வெற்றி பெறும் முதல் வழக்கின் வழக்குரைஞர் கட்டணத்தை அவன் குரு தட்சினையாகக் கொடுத்து விடவேண்டும்.
வருடங்கள் உருண்டன. யுதலாஸ் தர்க்கமும் சட்டமும் நன்கு கற்றுத் தேர்ந்தான். பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லிக் கொடுத்து நிறைய சம்பாதிக்கவும் செய்தான்.ஆனால் கட்டணம் பற்றி வாயே திறக்கவில்லை. வழக்காடும் வேலையையும் செய்யாமல் நாள் கடத்தி வந்தான்.
ஒரு சமயத்தில் ஆசிரியர் ப்ரொடகோரஸ் பொறுமை இழந்து யுதலாஸ் மீது குருதட்சினைக்காக உள்ளூர்க்கோர்ட் ஒன்றில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய வாதமாவது:
யுதலாஸ் எனக்கு குருதட்சினை கொடுக்கவில்லை. ஆகவே அவரை எனக்கு குரு தட்சிணை வழங்கச் சொல்லி இந்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இந்தவழக்கில் தீர்ப்பு அப்படிப்பட்ட உத்தரவானால் யுதலாஸிடம் இருந்து இந்த நீதிமன்றம் எனக்கு எனது கட்டணத்தை வசூலித்துத் தரவேண்டும். இல்லை இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றால் எங்கள் இருவருக்கிடையில் உள்ள ஒப்பந்தப்படி நீதிமன்றம் இந்த வழக்கின் காஸ்ட் எனக் கருதி அறிவிக்கும் தொகையை எனக்கு அவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
யுதலாஸ் தனது எதிர்வாதத்தில் இவாறு சொன்னார்: நான் அவருக்கு குருதட்சினைக்கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.ஒப்பந்தப்படி நான் முதல் வழக்கில் வெற்றி பெற்றால்தான் அவருக்கு குருதட்சினை செலுத்த வேண்டும். நான் இன்னும் என்னுடைய முதல் வழக்கில் வெற்றிபெறவில்லை. ஆகவே நான் வென்று விட்டால் நீதிமன்றமே சொல்லிவிடும் நான் கட்டணம் செலுத்த வேண்டாமென்று. தோற்று விட்டால் ஒப்பந்தப் படி நான் குருதட்சினை செலுத்த வேண்டியதில்லை.
எப்படி?
விடாகண்டனுக்கேற்ற கொடாக்கண்டன். குருவையே மிஞ்சிய சிஷ்யன்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு. இன்றும் தர்க்க சாஸ்திர வகுப்புகளிலும் சட்ட வகுப்புகளிலும் வவாதிக்கப்டும் பிரசித்தமான Paradox இது