"நான் என்னத்த சொல்றது.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனாளாம் அங்க நாலு கொடுமை வந்து ஆடுச்சாம" என்கிற சொலவடைக்கு பொருந்துவது போலே... என் வாடகைய வசூலிச்சு தாங்க சாமின்னு கோர்டுக்கு போனா அங்க கோர்ட்டே வக்கீலுங்ககிட்ட பாக்கி வசூலிக்கலயாம் படிங்க இந்த செய்திய
Advertisement
பதிவு செய்த நாள்
24ஜூன்2015
02:20
சென்னை : வழக்கறிஞர்கள் அறைக்கான வாடகை பாக்கி செலுத்த, ஜூலை, 10ம் தேதி வரை, உயர் நீதிமன்ற நிர்வாகம் கெடு விதித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கான அறைகள், 500க்கும் மேல் உள்ளன. அறைகளுக்கான வாடகையை, உயர் நீதிமன்ற பதிவு துறையில், வழக்கறிஞர்கள் செலுத்த வேண்டும்.அறையின் அளவைப் பொறுத்து, வழக்கறிஞர்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒரு வழக்கறிஞருக்கு, மாத கட்டணம் என பார்த்தால், 250 ரூபாய் அளவுக்கு வரும்.அறைகளுக்கான வாடகையை, வழக்கறிஞர்கள் பலர் செலுத்தாமல் உள்ளனர். வாடகையை செலுத்தும்படி, அவ்வப்போது, பதிவு துறையும், வழக்கறிஞர்களை அறிவுறுத்தி வருகிறது.தற்போது, 3,000 ரூபாய்க்கு மேல், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை, வழக்குப் பட்டியலில், பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், உயர் நீதிமன்றத்தில் உள்ள, பிரபலமான வழக்கறிஞர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.வாடகை கட்டணத்தை, ஜூலை, 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், 'நோட்டீஸ்' கொடுக்காமல், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என, பதிவுத் துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment