Friday, June 29, 2018

'' நாடக காவலர் '' ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு

'' நாடக காவலர் '' ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு !  தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு. 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.                                                                                    சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரைஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்பவான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன. திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனாகவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திருக்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம்.  இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", வல்லவனுக்கு வல்லவன் , குழந்தைக்காக  போன்ற படங்களைச்
 சொல்லலாம்                                                                         1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.

அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.                                                                          இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன். அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு.

தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன. சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு.

தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள். அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார். 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார்.  திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார். இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார். சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும். . வாழ்க ஆர்.எஸ்.மனோகர் புகழ்!                                                                         நன்றி  பாரதி பயிலகம் வலைப்பூ .

Friday, June 22, 2018

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள்.

ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'......

ஓர் கண்ணோட்டம்.....

ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......

தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது.

பொறுமையாக இதைப்படியுங்கள்.

கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.

 அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.

கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது.

 ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.

அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது.
ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார்.

அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.

அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.

அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.

கவுசிகனுக்கோ கோபமான கோபம்.

கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.

அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?' என்று கேலி பேசினாள்.

கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.

அவள் மேலும் சொன்னாள்.

"நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.

அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும்.

நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?

 கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்' என்றாள்.

இன்று எத்தனை பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம்.

வீட்டில் குழந்தைகள், தாய், தகப்பன், மாமன், மாமி,  கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?

கடமைகளைச் செய்வது தான் உண்மையான வழிபாடு என்றும் சாமியாரை விடு.. மாமியாரை மதி' என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா இந்த மகாபாரதக் கதை!

கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!

காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.

அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.

மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர். இறைச்சி வணிகர்.

கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும், முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?'' என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

கொஞ்சம் பொறுங்கள்.. மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார்.

பின்னர் வீடு போனதும், தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.

வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர். இது வழிவழியாக வந்த தொழில். நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.

இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன். மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன்.

 எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,'' என்று தர்மத்தை விளக்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள்.  இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன. ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள். அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,'' என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.

இந்தக்கதையை இளம்பிள்ளைகள் ஒரு முறைக்கு நூறுமுறை படிக்க வேண்டும்.

பெற்றோரைக் கடுஞ்சொல் பேசி ஏசி நோகடித்து விட்டு முதியோர் இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கிறார்கள்.

இந்தப்பக்தி வெறும் வேஷமில்லையா?

இன்று எத்தனை சாமியார்களின் கார்ப்பரேட் கம்பெனிகளில், உயர வேண்டிய இளைஞர்கள்  வேலைக்காரர்களாக, இலவச (பரவச!) ஊழியர்களாக வலம் வருகிறார்கள் தெரியுமா?

மரணத்திற்கு முன்பே பெற்றோர் வயிற்றில் கொள்ளி வைத்துவிட்டு  பகவான்கள் பின்னாலும், அல்ப ஆனந்தாக்கள் பின்னாலும் ஆடிப்பாடிக் கொண்டு அலையும் அசட்டு ஆத்மாக்களைக் கண்டு என் நெஞ்சு பதறுகிறது!....

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்                                 
                                          வாழ்கவளமுடன்

Wednesday, June 6, 2018

விஞ்ஞானியும் பாமரனும்

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
 பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.

 அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,

 கால் தடுக்கிக் கீழே விழ ,

கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்

 ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,

 " இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??

 எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!

அதற்கு வழிப்போக்கன்

"இதுதான் உங்கள் பிரச்னையா......?

 அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!

மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி

 இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார்
செய்து கொள்ளுங்கள்.......!!!

வண்டியை ஓட்டிச் சென்று,

 அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,

 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது.......!!!

 நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்,

 இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே.........!!!

இவரைப்போய் ,

குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ........
என்று
தலை குனிந்தார் விஞ்ஞானி......!

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.........!!!!!!!

உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு.........!!!!!

நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!!

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
படித்ததில் பிடித்தது...
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

பரமனும் பக்தனும் விதியும்

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.

 "கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!!

 "அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!!

 "கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!!

"இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

  "இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!!

"அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......?
.என்று எண்ணிய அவர்....

  ஒரு நாள் இறைவனிடம்....,

  “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே….....,

 "உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்".......!!

 "நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......?
  என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க,

அதற்கு பதிலளித்த இறைவன்.....,

“எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!!

"எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!!

ஆனால்..,
." ஒரு முக்கிய நிபந்தனை" ..!

"நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்"......!!

 வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும்.

"யார் என்ன சொன்னாலும்"....,

" கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது".......

"நீ ஒரு சாமி விக்ரகமாக இருக்கிறாய் என்பதை மறந்துவிடக்கூடாது".........!!
 என்று கூற,

 அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள்.....,
  "இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு".......,

 "கோவில் மூலஸ்தானத்தில் இவர் நின்று கொள்ள".......,

  இறைவனோ.......,
 " இவரைப் போல தோற்றத்தை ஏற்று"......,

  "கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார்"......!!

 முதலில், 

 "ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான்".....!!

 "தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று"......,

  இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு......,

 "ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான்".......!!

 செல்லும்போது.....,

  "தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான்"........!!

  இதை " இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாள் பார்க்கிறார்".......!!

 ஆனால், .
 "இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை"....!!

 "அப்படியே அசையாது நிற்கிறார்"......!!

சற்று நேரம் கழித்து......,

  "ஒரு பரம ஏழை அங்கு வந்தான்".......!!

 "அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது"........!!

 “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது".......!!

 " என்னை மன்னித்துவிடு இறைவா"........!!

 "என்னை ரட்சிக்கவேண்டும்"....!!

  என் குடும்பத்தில் ரொம்ப வறுமை.....!!

"மிக கஷ்டமாக இருக்கிறது இறைவா"......!!

  "உன்னை நம்பியே வாழ்கிறேன் ஐயனே".......!!

  எனக்கு ஒரு வழி காட்டு இறைவா” ......

 என்று மனமுருக  கண்கள் மூடி பிரார்த்தனை செய்தான்.

 கண்ணை திறந்தவனுக்கு எதிரே,

 " அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது"........!!

 " உள்ளே பணத்தை தவிர".....

 " தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன"........!!

 " இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி".........,

 "அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொண்டான்"......!!

"இறைவன் வேடத்தில் நின்றிருந்த  சேவகர் இதை கவனித்தார்" ......!!
.
"வாய் விட்டு  எதுவும் சொல்ல முடியவில்லை"......!!

சிறிது நேரம் கழித்து......,

 "வேறு ஒரு கப்பல் வியாபாரி வந்தான்"......!!

 "ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில்  அவன் செல்லவிருப்பதால்".....,

 "இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான்"......!!

  "இறைவனிடம் பிரார்த்தனை செய்தான்"......!!

 அந்த நேரம் பார்த்து......,

 "பணப் பையை தொலைத்த செல்வந்தன்".......,

 "காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்"......!!

"கப்பல் வியாபாரி  பார்த்து".....
   “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும்".......!!

 "இவரை பிடித்து விசாரியுங்கள்”......,
 என்று காவலர்களிடம் கூற,

 காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள்.

 “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி......!!”

  என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல,

  இறைவன் வேடத்தில் இருந்த பணியாள் ....,

 இறைவனை நினைத்து..., “இது நியாயமா".....?
 "அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா"......?

 "இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது"…...!!
 என்று கூறி,

  “கப்பல் வியாபாரி திருடவில்லை".......!!

 " தவறு அவர் மீது இல்லை"....!!.

  என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த  பணியாள்....,

  "நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்".......!!

  அந்த ஏழையிடம் பணப்பையை வாங்கி கொண்டு செல்வந்தர் சென்றார்......!!

 "கப்பல் வியாபாரி விடுவிக்கப்பட்டார் "......!!

"இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது"......!!

 "இறைவன் வருகிறார்"....!!

  இறைவனுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த  பணியாளிடம்........,

 " இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார்"........!!

 “மிகவும் கடினமாக இருந்தது".......!!

 " உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்"........!!

 "ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….”......

  என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். 

“நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை"...….?

 "என்ன நடந்தாலும் பேசக்கூடாது"......, "அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை".......,

" நீ ஏன் மீறினாய்"..….?

 "உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை"........!!!

 "இங்கு வருபவர்களது சூழ்நிலையை அறியாதவனா நான்".....!!

 “செல்வந்தன் அளித்த காணிக்கை".......,

 "தவறான வழியில் சம்பாதித்தது"......!!

  "அது அவனோட மொத்த  செல்வத்தில் ஒரு சிறு துளி தான்".......!!

 "ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு".......,

 "நான் பதிலுக்கு அவனுக்கு நிறை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்"......!!

 ஆனால்....,
  "அந்த ஏழை கொடுத்ததோ".....,

   "அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான்".........!!

  இருப்பினும்....
  " என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான்".......!!

இந்த சம்பவத்தில்,

 " கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை"......!!

  இருந்தாலும்......,

இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால்......,

 "விபத்தை சந்திக்க நேரிடும்"........!!

 " புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்"........!!

 அதிலிருந்து அவனை காக்கவே ......,

 "அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமத்தி"......,

 " சிறைக்கு அனுப்ப நினைத்தேன்".......!!

 "அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான்"........!!

 "அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்".......!!

இதன் மூலம்......,
 "அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்".....!!

 "அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்"......!!

 இப்படி.....,
  "ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன்"....!!

 ஆனால்,

 "நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து"...,

 "உன் எண்ணங்களை செயல்படுத்தி"......,

" அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.....!

 சேவகன்,
 "இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்:.....!!

“இப்போது புரிந்துகொள்".....!!

  "நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும்"......!!

அது ஒவ்வொன்றையும்....,

 "மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது"......!!

 "அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்"......!!

 "நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது"......!!

 "கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”.......!!

 என்றான் இறைவன் புன்னகைத்தபடி.....!!